<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Pungudutivu Org &#187; Peoples</title>
	<atom:link href="http://www.pungudutivu.org/category/peoples/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.pungudutivu.org</link>
	<description>Pungudutivu Welfar Association UK</description>
	<lastBuildDate>Tue, 15 May 2012 11:36:00 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.2</generator>
		<item>
		<title>மண்ணின் மைந்த்தர்கள் &#8211; திரு சிவசாமி பிரேம் ஆனந்தன்</title>
		<link>http://www.pungudutivu.org/mannin-maintharkal-sivasamy-prem-ananthan</link>
		<comments>http://www.pungudutivu.org/mannin-maintharkal-sivasamy-prem-ananthan#comments</comments>
		<pubDate>Sun, 29 Apr 2012 14:53:33 +0000</pubDate>
		<dc:creator>Pungudutivu.org</dc:creator>
				<category><![CDATA[Peoples]]></category>
		<category><![CDATA[mannin maintharkal]]></category>
		<category><![CDATA[மண்ணின் மைந்த்தர்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.pungudutivu.org/?p=3182</guid>
		<description><![CDATA[திரு சிவசாமி பிரேம் ஆனந்தன் சமூக சேவகர்/Group COO &#8211; LycaMobile Group) புங்குடுதீவு 11 ம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைப்பாறிய அதிபர் ஐயாத்துரை சிவசாமி அவர்களுக்கும் சிவசாமி பத்மலோசனி அவர்களுக்கும் மகனாக 1963 ஆம் ஆண்டு பிறந்தார். சசிரேகாவை கரம் பிடித்து நான்கு மக்கட் செல்வங்களையும் பெற்றெடுத்து சீரும் சிறப்புமாக வாழ்ந்து வரும் இவர் ...]]></description>
			<content:encoded><![CDATA[<p>திரு சிவசாமி பிரேம் ஆனந்தன்<br />
சமூக சேவகர்/Group COO &#8211; LycaMobile Group)</p>
<p><a  href="http://www.pungudutivu.org/wp-content/uploads/2012/04/prem.jpeg" class="thickbox no_icon" rel="gallery-3182" title=""><img src="http://www.pungudutivu.org/wp-content/uploads/2012/04/prem-419x485.jpg" alt="" title="prem" width="419" height="485" class="aligncenter size-medium wp-image-3184" /></a></p>
<p>புங்குடுதீவு 11 ம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைப்பாறிய அதிபர் ஐயாத்துரை<br />
சிவசாமி அவர்களுக்கும் சிவசாமி பத்மலோசனி அவர்களுக்கும் மகனாக 1963 ஆம்<br />
ஆண்டு பிறந்தார். சசிரேகாவை கரம் பிடித்து நான்கு மக்கட் செல்வங்களையும்<br />
பெற்றெடுத்து சீரும் சிறப்புமாக வாழ்ந்து வரும் இவர் எமது ஊரிற்காக ஆற்றிய<br />
பணிகள் ஏராளம்.</p>
<p>புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தின் நீண்ட நாள் அனுதாபியான இவர் ஆரம்பக்<br />
கல்வியை புங்குடுதீவு ஸ்ரீ கணேஷ மஹா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை<br />
Middlesex University யில் BA (Hons) Accounting &#038; Finance பிரிவிலும் கற்று<br />
சிறந்த கல்விமானாக திகழ்ந்தார்.</p>
<p>தற்போது இவர் LycaMobile Group of Companies இல் Group Chief Operating Officer ஆக<br />
பணியாற்றுகிறார்.</p>
<p>இளம் வயதிலும் மிகவும் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருப்பதற்கு இவரின் ஆற்றலும் தனித் திறமையுமே<br />
காரணமாகும். இவர் புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தில் பல பொறுப்புகளையும் வகித்திருந்தார். </p>
<p>அதோடு மட்டுமல்லாது ஒவ்வொரு காற்றுவழிக் கிராமம் நிகழ்விற்கும் Lyca Mobile ஊடாகவும் தனியாகவும்<br />
பொருளாதார உதவிகளை செய்து வந்துள்ளார். இன்றைய மண்ணின் மைந்தர்கள் விருதிற்கு இவர்<br />
மிகவும் பொருத்தமானவரே!</p>
<p>இன்னும் மேலும் மேலும் இவரின் வெற்றிப பயணங்கள் தொடர வாழ்த்துகின்றோம்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.pungudutivu.org/mannin-maintharkal-sivasamy-prem-ananthan/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மண்ணின் மைந்த்தர்கள் &#8211; திரு வீரசிங்கம் பாலசுப்பிரமணியம்</title>
		<link>http://www.pungudutivu.org/mannin-maintharkal-veerasingam-balasubramaniam</link>
		<comments>http://www.pungudutivu.org/mannin-maintharkal-veerasingam-balasubramaniam#comments</comments>
		<pubDate>Sun, 29 Apr 2012 14:49:24 +0000</pubDate>
		<dc:creator>Pungudutivu.org</dc:creator>
				<category><![CDATA[Peoples]]></category>
		<category><![CDATA[mannin maintharkal]]></category>
		<category><![CDATA[மண்ணின் மைந்த்தர்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.pungudutivu.org/?p=3179</guid>
		<description><![CDATA[திரு வீரசிங்கம் பாலசுப்பிரமணியம் சமூக சேவகர்/வர்த்தகர் புங்குடுதீவு 10ம் வட்டாரம் திரு திருமதி வீரசிங்கம் தம்பதிகளின் நான்காவது புதல்வர் திரு பாலசுப்பிரமணியம் அவர்கள். இவர் தனது ஆரம்பக்கல்வியை புங்குடுதீவிலும், உயர் கல்வியை தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். பின்பு மேற்படிப்பிற்காக 1978ம் ஆண்டு லண்டன் வந்து சேர்ந்தார். 1960 &#8211; 1972ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ...]]></description>
			<content:encoded><![CDATA[<p>திரு வீரசிங்கம் பாலசுப்பிரமணியம்<br />
சமூக சேவகர்/வர்த்தகர்</p>
<p><a  href="http://www.pungudutivu.org/wp-content/uploads/2012/04/Bala-pic.jpg" class="thickbox no_icon" rel="gallery-3179" title=""><img src="http://www.pungudutivu.org/wp-content/uploads/2012/04/Bala-pic.jpg" alt="" title="Bala-pic" width="264" height="351" class="aligncenter size-full wp-image-3180" /></a></p>
<p>புங்குடுதீவு 10ம் வட்டாரம் திரு திருமதி வீரசிங்கம் தம்பதிகளின் நான்காவது<br />
புதல்வர் திரு பாலசுப்பிரமணியம் அவர்கள். இவர் தனது ஆரம்பக்கல்வியை<br />
புங்குடுதீவிலும், உயர் கல்வியை தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார்.</p>
<p>பின்பு மேற்படிப்பிற்காக 1978ம் ஆண்டு லண்டன் வந்து சேர்ந்தார்.</p>
<p>1960 &#8211; 1972ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் காலஞ்சென்ற பிரபல எழுத்தாளர்,<br />
இலக்கியவாதி, சமூக சேவகர், கவிஞர் மு தளயசிங்கம் அவர்களிடம் முறைப்படி<br />
சீடரானார்.</p>
<p>புங்குடுதீவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளை<br />
எதிர்த்து திரு மு தளயசிங்கத்துடன் இணைந்து சமபந்தி உரிமை, கிணற்றில் நீர்<br />
அள்ளுதல், ஆலய பிரவேசம் போன்ற போராட்டங்களை மேற்கொண்டும், இலவச வகுப்புகள், சிரமதான<br />
பணிகள் போன்றவற்றையும் செய்தார். இவர்களுடன் இணைந்து எழுத்தாளர் மு பொன்னம்பலம், கவிஞர்<br />
சு வில்வரத்தினம,; சமூக சேவையாளர் மு நேமிநாதன் போன்றோரும் ஒரு குழுவாக போராட்டங்களை<br />
நடாத்தினர்.</p>
<p>இன்று வணிகத்துறையில் ‘பத்மினி நகை மாளிகை’ நிறுவனத்தை லண்டனில் நடாத்திவரும் அதேவேளை,<br />
புங்குடுதீவு மக்களுக்கு தொடர்ச்சியாக தனது சேவையை செய்து வருகிறார்.</p>
<p>திரு வீ பாலசுப்பிரமணியம் அவர்கள் 2003ம் ஆண்டு தாயகம் சென்று, புங்குடுதீவு மக்களுக்கு கல்வி<br />
அறிவை வளர்க்கும் நோக்கில் முதலில் தனது வீட்டிலும், பல சனசமூக நிலையங்களிலும் சட்டத்தரணி மு<br />
நேமிநாதனுடன் இணைந்து, சில வர்த்தகர்களின் உதவியுடனும் 5 சிறுவர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு<br />
இலவச கல்வி, புத்தகம், உணவு, உடை வழங்கி நிறுவகித்து வருகிறார். தையல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு<br />
அங்கு பெண்களுக்கு தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது.</p>
<p>ஆடு, மாடு வளர்ப்பதற்கும், சுயதொழில் செய்வதற்கான உபகரணங்கள், மீன்பிடி வலைகள் வழங்கியும்<br />
மக்களுக்கு உதவிகள் செய்தார். தூர்ந்து போன குளம், கிணறுகள் துர்வாரப்பட்டு, திருத்தியமைக்கப்பட்டன.</p>
<p>தான் கல்வி கற்ற தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரிக்கு மதில், கொட்டகை, மலசல கூடம், கிணறு<br />
போன்றவற்றை திருத்த பல உதவிகள் செய்துள்ளார். புங்குடுதீவு மகா வித்தியாலத்திற்கு வடக்கு வீதி<br />
மதிலும் கட்டிக்கொடுத்துள்ளார். இளையோர், முதியோர்களுக்கு ஆங்கில, கணித வகுப்புக்கள் ஆரம்பித்துக்<br />
கொடுத்துள்ளார். விளையாட்டுப்போட்டி நடாத்தி, மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்கிக்<br />
கொடுத்தார்.</p>
<p>சமாதானக் காலங்களிலும், போர்க் காலங்களிலும் இலங்கைக்குச் சென்று தொடர்ந்தும் தனது சமூகப்<br />
பணியை புங்குடுதீவு, சரவணை போன்ற கிராமங்களில் விஸ்தரித்துக்கொண்டே இருக்கிறார். திரு வீ<br />
பாலசுப்பிரமணியம் தமிழ் இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டவர்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.pungudutivu.org/mannin-maintharkal-veerasingam-balasubramaniam/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மண்ணின் மைந்த்தர்கள் &#8211; திரு முருகேசபிள்ளை நேமிநாதன்</title>
		<link>http://www.pungudutivu.org/mannin-maintharkal-murukesappillai-neminathan</link>
		<comments>http://www.pungudutivu.org/mannin-maintharkal-murukesappillai-neminathan#comments</comments>
		<pubDate>Sun, 29 Apr 2012 14:44:42 +0000</pubDate>
		<dc:creator>Pungudutivu.org</dc:creator>
				<category><![CDATA[Peoples]]></category>
		<category><![CDATA[mannin maintharkal]]></category>
		<category><![CDATA[மண்ணின் மைந்த்தர்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.pungudutivu.org/?p=3176</guid>
		<description><![CDATA[திரு முருகேசபிள்ளை நேமிநாதன் சட்டத்தரணி/சமூக சேவகர்/எழுத்தாளர் புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு மூத்தவர் இராமர் முருகேசபிள்ளை, திருமதி அலங்காரம் (ராசம்மா) தம்பதிகளின் 5வது புதல்வர் சட்டத்தரணி திரு நேமிநாதன் அவர்கள். தனது ஆரம்பக்கல்வியை புங்குடுதீவிலும், உயர் கல்வியை இரத்தினபுரியிலும், சுன்னாகத்திலும் கற்றார். அறுபது, எழுபதுகளில் காலஞ்சென்ற புரட்சியாளர் திரு மு தளயசிங்கத்துடன் இணைந்து புங்குடுதீவில் ...]]></description>
			<content:encoded><![CDATA[<p>திரு முருகேசபிள்ளை நேமிநாதன்<br />
சட்டத்தரணி/சமூக சேவகர்/எழுத்தாளர்</p>
<p><a  href="http://www.pungudutivu.org/wp-content/uploads/2012/04/Nemi-photo.jpg" class="thickbox no_icon" rel="gallery-3176" title=""><img src="http://www.pungudutivu.org/wp-content/uploads/2012/04/Nemi-photo.jpg" alt="" title="Nemi-photo" width="265" height="357" class="aligncenter size-full wp-image-3177" /></a><br />
புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு மூத்தவர் இராமர் முருகேசபிள்ளை, திருமதி அலங்காரம்<br />
(ராசம்மா) தம்பதிகளின் 5வது புதல்வர் சட்டத்தரணி திரு நேமிநாதன் அவர்கள். தனது ஆரம்பக்கல்வியை<br />
புங்குடுதீவிலும், உயர் கல்வியை இரத்தினபுரியிலும், சுன்னாகத்திலும் கற்றார்.</p>
<p>அறுபது, எழுபதுகளில் காலஞ்சென்ற புரட்சியாளர் திரு மு தளயசிங்கத்துடன் இணைந்து புங்குடுதீவில்<br />
புரையோடிப்போயிருந்த சாதிப்பிரச்சினையில,; தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராட்டங்களை<br />
மேற்கொண்டும், சமூகப்பணிகளைச் செய்தும் வந்தார். இவர்களுடன் இணைந்து எழுத்தாளர் மு<br />
பொன்னம்பலம், கவிஞர் சு வில்வரத்தினம,; சமூக சேவையாளர் வீ பாலசுப்பிரமணியம் போன்றோரும்<br />
மற்றும் புங்குடுதீவு மக்களும் போராட்டங்களை நடாத்தினர்.</p>
<p>திரு நேமிநாதன் அவர்கள் 1973ம் ஆண்டு இலங்கையில் சட்டத்தரணியாக (Proctor) பதவிப்பிரமாணம்<br />
எடுத்து, 1978ம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்திலும், ஊர்காவற்துறையிலும் சட்டத்தரணியாக பணிபுரிந்தார்.<br />
1978ம் ஆண்டு லண்டனுக்கு மேற்படிப்பிற்காக வந்து, சட்டத்தரணியாக பதவியேற்றதிலிருந்து மனித<br />
உரிமைகள், அகதிகள் விவகாரம், இலக்கியம், அரசியல் என தமிழ் சமூகத்திற்கு தனது பங்களிப்பைச்<br />
செய்துகொண்டே இருக்கிறார்.</p>
<p>சிறு கதைகள் எழுதியும், நாடகம் எழுதி நடித்தும் உள்ளார். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள்<br />
போன்றவற்றை ‘தமிழ் ஈழ இலக்கியம்’ எனும் பெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார், ‘தமிழ் அகதி’<br />
எனும் தமிழ்ஃஆங்கில இரு மொழி சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணி புரிந்தார், இலங்கையில் ‘பூரணி’<br />
தமிழ் இலக்கிய காலாண்டிதழின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருந்தார், ‘சிதைந்து போன இந்து<br />
ஆலயங்கள்’ என்ற ங}லை ஆங்கிலத்தில் தொகுத்து வழங்கினார். ‘மத்தாப்பு’ என்ற காணொளி<br />
சஞ்சிகையை நண்பர்களுடன் இணைந்து நடாத்தினார். Hendon &#038; Kingsbury தமிழ் பாடசாலைகளின்<br />
செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.</p>
<p>இலங்கையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும்<br />
உதவி செய்யும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட ‘தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர் ஆதரவுக் குழு’ என்ற<br />
அமைப்பை லண்டனில் நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்து, அதன் தலைவராக இருந்து பல உதவிகளைச்<br />
செய்திருக்கிறார். இந்த அமைப்பின் மூலம் ‘விசாரணை செய் அல்லது விடுதலை செய்’ என்ற ங}லை<br />
ஆங்கிலத்தில் தொகுத்து வெளியிட்டார்.</p>
<p>அன்றிலிருந்து இன்று வரை புங்குடுதீவு மக்களுக்கும், இரத்தினபுரியில் வாழும் தமிழ் மக்களுக்கும் தனது<br />
வருவாயில் ஒரு பகுதியை செலவு செய்துகொண்டே இருக்கிறார் திரு நேமிநாதன் அவர்கள். குறிப்பாக<br />
கடந்த பல வருடங்களாக திரு வீ பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து சிறுவர்களுக்கான பாடசாலைகளை<br />
ஆரம்பித்து, இலவசக் கல்வி, உணவு, உடை என பலதரப்பட்ட உதவிகளைச் செய்தும், பெண்களுக்கு<br />
தொழில் வாய்ப்பு அளித்தும் வருகிறார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.pungudutivu.org/mannin-maintharkal-murukesappillai-neminathan/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மண்ணின் மைந்த்தர்கள் &#8211; திரு செல்லையா இலகுப்பிள்ளை (ஆசிரியர்)</title>
		<link>http://www.pungudutivu.org/manin-maintharkal-sellaiyah-ilakuppillai-teacher</link>
		<comments>http://www.pungudutivu.org/manin-maintharkal-sellaiyah-ilakuppillai-teacher#comments</comments>
		<pubDate>Sun, 29 Apr 2012 14:40:22 +0000</pubDate>
		<dc:creator>Pungudutivu.org</dc:creator>
				<category><![CDATA[Peoples]]></category>
		<category><![CDATA[mannin maintharkal]]></category>
		<category><![CDATA[மண்ணின் மைந்த்தர்க்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.pungudutivu.org/?p=3170</guid>
		<description><![CDATA[திரு செல்லையா இலகுப்பிள்ளை ஆசிரியர் திரு செல்லையா இலகுப்பிள்ளை அவர்கள், புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தில் திரு, திருமதி செல்லையா -நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனாக 30/09/927 ல் எம் மண்ணில் உதயமானார். இவர் 1950 &#8211; 1953 ஆண்டு காலப்பகுதியில் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியில் சிறப்புச் சித்தி பெற்றார். இவர் தனது ...]]></description>
			<content:encoded><![CDATA[<p>திரு செல்லையா இலகுப்பிள்ளை<br />
ஆசிரியர்</p>
<p><a  href="http://www.pungudutivu.org/wp-content/uploads/2012/04/scan0004.jpeg" class="thickbox no_icon" rel="gallery-3170" title=""><img src="http://www.pungudutivu.org/wp-content/uploads/2012/04/scan0004.jpeg" alt="" title="scan0004" width="100" height="162" class="aligncenter size-full wp-image-3171" /></a><br />
திரு செல்லையா இலகுப்பிள்ளை அவர்கள், புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தில்<br />
திரு, திருமதி செல்லையா -நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனாக<br />
30/09/927 ல் எம் மண்ணில் உதயமானார். இவர் 1950 &#8211; 1953 ஆண்டு<br />
காலப்பகுதியில் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியில்<br />
சிறப்புச் சித்தி பெற்றார்.</p>
<p>இவர் தனது ஆசிரியர் பதவியினை, பதுளை புனித சென்பீட்டர்ஸ் கத்தோலிக்க<br />
கல்லூரியில் ஆரம்பித்தார். அக்காலப்பகுதியில் இவர் பதுளை சைவ பரிபாலன<br />
சபையின் உப தலைவராகவும் கடமை ஆற்றினார்.</p>
<p>சமய, சமூக சேவகரான நமது இலகுப்பிள்ளை ஆசிரியர் அவர்கள் 1966 காலப்பகுதியில் புங்குடுதீவு<br />
துரைச்சாமி வித்தியாலய அதிபராகக் கடமை புரிந்தார்.</p>
<p>அத்துடன் பானாவிடை சிவன் கோவில் மற்றும் முத்தலிப்புலம் வீரகத்தி விநாயகர் ஆலயங்களிலும் தனது<br />
சமயப்பணிகளில் பெரும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டார் . இவரது சமயப்பணிகள் புலம் பெயர்ந்து இங்கிலாந்து<br />
வந்த பின்னரும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.</p>
<p>நமது இலகுப்பிள்ளை ஆசிரியரிடம் கல்வி பயின்ற பெருமளவிலான மாணவர்கள் ,புலம்பெயர் தேசங்களிலும்,<br />
உள்ளூரிலும் பல துறைகளில் முன்னேறி வருவது, இவரது ஆரம்பக் கல்விக்கு கிடைத்த வெற்றி<br />
என்றால் மிகையாகாது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.pungudutivu.org/manin-maintharkal-sellaiyah-ilakuppillai-teacher/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>புங்குடுதீவு மண்ணும் மக்களும் 1</title>
		<link>http://www.pungudutivu.org/punkudutivu-mannum-makkalum</link>
		<comments>http://www.pungudutivu.org/punkudutivu-mannum-makkalum#comments</comments>
		<pubDate>Wed, 19 Oct 2011 21:17:34 +0000</pubDate>
		<dc:creator>Pungudutivu.org</dc:creator>
				<category><![CDATA[Peoples]]></category>
		<category><![CDATA[People]]></category>
		<category><![CDATA[மண்ணும் மக்களும்]]></category>

		<guid isPermaLink="false">http://www.pungudutivu.org/?p=2801</guid>
		<description><![CDATA[புங்குடுதீவு மண்ணும் மக்களும் &#160;]]></description>
			<content:encoded><![CDATA[<p>புங்குடுதீவு மண்ணும் மக்களும்</p>
<p>&nbsp;</p>

<a  href="http://www.pungudutivu.org/punkudutivu-mannum-makkalum/pungudutivu-mannum-makkalum-1" title="pungudutivu-mannum-makkalum-1"><img width="300" height="300" src="http://www.pungudutivu.org/wp-content/uploads/2011/10/pungudutivu-mannum-makkalum-1-300x300.jpg" class="attachment-thumbnail" alt="pungudutivu-mannum-makkalum-1" title="pungudutivu-mannum-makkalum-1" /></a>
<a  href="http://www.pungudutivu.org/punkudutivu-mannum-makkalum/pungudutivu-mannum-makkalum-2" title="pungudutivu-mannum-makkalum-2"><img width="300" height="300" src="http://www.pungudutivu.org/wp-content/uploads/2011/10/pungudutivu-mannum-makkalum-2-300x300.jpg" class="attachment-thumbnail" alt="pungudutivu-mannum-makkalum-2" title="pungudutivu-mannum-makkalum-2" /></a>
<a  href="http://www.pungudutivu.org/punkudutivu-mannum-makkalum/pungudutivu-mannum-makkalum-3" title="pungudutivu-mannum-makkalum-3"><img width="300" height="300" src="http://www.pungudutivu.org/wp-content/uploads/2011/10/pungudutivu-mannum-makkalum-3-300x300.jpg" class="attachment-thumbnail" alt="pungudutivu-mannum-makkalum-3" title="pungudutivu-mannum-makkalum-3" /></a>
<a  href="http://www.pungudutivu.org/punkudutivu-mannum-makkalum/pungudutivu-mannum-makkalum-4" title="pungudutivu-mannum-makkalum-4"><img width="300" height="300" src="http://www.pungudutivu.org/wp-content/uploads/2011/10/pungudutivu-mannum-makkalum-4-300x300.jpg" class="attachment-thumbnail" alt="pungudutivu-mannum-makkalum-4" title="pungudutivu-mannum-makkalum-4" /></a>
<a  href="http://www.pungudutivu.org/punkudutivu-mannum-makkalum/pungudutivu-mannum-makkalum-5" title="pungudutivu-mannum-makkalum-5"><img width="300" height="300" src="http://www.pungudutivu.org/wp-content/uploads/2011/10/pungudutivu-mannum-makkalum-5-300x300.jpg" class="attachment-thumbnail" alt="pungudutivu-mannum-makkalum-5" title="pungudutivu-mannum-makkalum-5" /></a>
<a  href="http://www.pungudutivu.org/punkudutivu-mannum-makkalum/pungudutivu-mannum-makkalum-6" title="pungudutivu-mannum-makkalum-6"><img width="300" height="300" src="http://www.pungudutivu.org/wp-content/uploads/2011/10/pungudutivu-mannum-makkalum-6-300x300.jpg" class="attachment-thumbnail" alt="pungudutivu-mannum-makkalum-6" title="pungudutivu-mannum-makkalum-6" /></a>
<a  href="http://www.pungudutivu.org/punkudutivu-mannum-makkalum/pungudutivu-mannum-makkalum-7" title="pungudutivu-mannum-makkalum-7"><img width="300" height="300" src="http://www.pungudutivu.org/wp-content/uploads/2011/10/pungudutivu-mannum-makkalum-7-300x300.jpg" class="attachment-thumbnail" alt="pungudutivu-mannum-makkalum-7" title="pungudutivu-mannum-makkalum-7" /></a>
<a  href="http://www.pungudutivu.org/punkudutivu-mannum-makkalum/pungudutivu-mannum-makkalum-8" title="pungudutivu-mannum-makkalum-8"><img width="300" height="300" src="http://www.pungudutivu.org/wp-content/uploads/2011/10/pungudutivu-mannum-makkalum-8-300x300.jpg" class="attachment-thumbnail" alt="pungudutivu-mannum-makkalum-8" title="pungudutivu-mannum-makkalum-8" /></a>
<a  href="http://www.pungudutivu.org/punkudutivu-mannum-makkalum/pungudutivu-mannum-makkalum-9" title="pungudutivu-mannum-makkalum-9"><img width="300" height="300" src="http://www.pungudutivu.org/wp-content/uploads/2011/10/pungudutivu-mannum-makkalum-9-300x300.jpg" class="attachment-thumbnail" alt="pungudutivu-mannum-makkalum-9" title="pungudutivu-mannum-makkalum-9" /></a>
<a  href="http://www.pungudutivu.org/punkudutivu-mannum-makkalum/pungudutivu-mannum-makkalum-10" title="pungudutivu-mannum-makkalum-10"><img width="300" height="300" src="http://www.pungudutivu.org/wp-content/uploads/2011/10/pungudutivu-mannum-makkalum-10-300x300.jpg" class="attachment-thumbnail" alt="pungudutivu-mannum-makkalum-10" title="pungudutivu-mannum-makkalum-10" /></a>
<a  href="http://www.pungudutivu.org/punkudutivu-mannum-makkalum/pungudutivu-mannum-makkalum-11" title="pungudutivu-mannum-makkalum-11"><img width="300" height="300" src="http://www.pungudutivu.org/wp-content/uploads/2011/10/pungudutivu-mannum-makkalum-11-300x300.jpg" class="attachment-thumbnail" alt="pungudutivu-mannum-makkalum-11" title="pungudutivu-mannum-makkalum-11" /></a>
<a  href="http://www.pungudutivu.org/punkudutivu-mannum-makkalum/pungudutivu-mannum-makkalum-12" title="pungudutivu-mannum-makkalum-12"><img width="300" height="300" src="http://www.pungudutivu.org/wp-content/uploads/2011/10/pungudutivu-mannum-makkalum-12-300x300.jpg" class="attachment-thumbnail" alt="pungudutivu-mannum-makkalum-12" title="pungudutivu-mannum-makkalum-12" /></a>
<a  href="http://www.pungudutivu.org/punkudutivu-mannum-makkalum/pungudutivu-mannum-makkalum-13" title="pungudutivu-mannum-makkalum-13"><img width="300" height="300" src="http://www.pungudutivu.org/wp-content/uploads/2011/10/pungudutivu-mannum-makkalum-13-300x300.jpg" class="attachment-thumbnail" alt="pungudutivu-mannum-makkalum-13" title="pungudutivu-mannum-makkalum-13" /></a>
<a  href="http://www.pungudutivu.org/punkudutivu-mannum-makkalum/pungudutivu-mannum-makkalum-14" title="pungudutivu-mannum-makkalum-14"><img width="300" height="300" src="http://www.pungudutivu.org/wp-content/uploads/2011/10/pungudutivu-mannum-makkalum-14-300x300.jpg" class="attachment-thumbnail" alt="pungudutivu-mannum-makkalum-14" title="pungudutivu-mannum-makkalum-14" /></a>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.pungudutivu.org/punkudutivu-mannum-makkalum/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>புங்கை. நாவேந்தன்</title>
		<link>http://www.pungudutivu.org/%e0%ae%aa%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d</link>
		<comments>http://www.pungudutivu.org/%e0%ae%aa%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d#comments</comments>
		<pubDate>Thu, 13 Oct 2011 16:58:30 +0000</pubDate>
		<dc:creator>Pungudutivu.org</dc:creator>
				<category><![CDATA[Peoples]]></category>
		<category><![CDATA[Writers]]></category>
		<category><![CDATA[நாவேந்தன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.pungudutivu.org/?p=2680</guid>
		<description><![CDATA[நாவேந்தன் (டிசம்பர் 14, 1932 &#8211; ஜூலை 10, 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது &#8220;வாழ்வு&#8221; சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது. நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தவர். பயிற்றப்பட்ட ...]]></description>
			<content:encoded><![CDATA[<p>நாவேந்தன் (டிசம்பர் 14, 1932 &#8211; ஜூலை 10, 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது &#8220;வாழ்வு&#8221; சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது.</p>
<p>நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தவர். பயிற்றப்பட்ட ஆசிரியராகி சட்டமுதற் தேர்வில் சித்திபெற்று முதலாந்தர அதிபராகப் பதவியில் உயர்ந்தவர். அரசியல் அரங்கிலும் இலக்கிய உலகிலும் தனக்கெனத் தனியான தமிழ் நடையைக் கொண்டிருந்தார்.</p>
<p>மது பதினைந்தாவது வயதில் இந்து சாதனம் மூலம் எழுத்துத்துறையில் புகுந்த நாவேந்தன் தமிழ்க் குரல், சங்கப்பலகை, நாவேந்தன், நம்நாடு ஆகிய இதழ்களை நடத்தினார். ஆம்பலூர் அருணகிரிதாசர், பண்டிதர் பரசுராமமூர்த்தி, காண்டீபன், நக்கீரன், தீப்பொறி, ததீஜி ஆகிய பல புனைப்பெயர்களில் விமர்சனங்களை எழுதியுள்ளார்.</p>
<p>தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, விவேகி, கலைச் செல்வி, உதயன், உதயதாரகை ஆகிய இதழ்களில் இவரது சிறுகதைகள் பல வெளிவந்தன. எனினும் சுதந்திரனிலேயே அதிகமான சிறுகதைகளையும் நாடகங்களையும் கவிதைகளையும் எழுதியுள்ளார். தமிழகத்திலிருந்து வெளியான தென்றல், உமா, கலைமன்றம், அறப்போர், தென்றல்திரை, சாட்டை, மணிமொழி ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியிட்டுள்ளன. தமது இறுதிக்காலத்தில் இவர் எழுதிய &#8220;மரியாள் மகதலேனா&#8221; என்னும் குறுங்காவியத்தை தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாணம் அத்தியட்சாதீனம் வெளியிட்டது.</p>
<p>சமுதாய அவலங்களை சாதாரண மக்களின் பிரச்சினைகளை மூடத்தனங்களை தீண்டாமையைக் கருப்பொருளாகக் கொண்டு சிறுகதைகள் படைத்தார். இவர் அநேக கட்டுரை நூல்களையும் நாடகங்களையும் எழுதியுள்ளார்.</p>
<p>யாழ்ப்பாணம் மாநகரசபையின் பிரதி மேயராகவும் பதவிவகித்தவர் நாவேந்தன். இலங்கை தமிழரசுக் கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் பங்குபற்றியவர். சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டத்திலீடுபட்டு ஒருவார காலச் சிறைத் தண்டனையையும் அனுபவித்தவர். சிறையிலிருந்து வெளிவந்ததும் அவர் எழுதி வெளியிட்ட &#8220;சிறீ அளித்த சிறை&#8221; என்னும் நூல் அரசியல் தலைவர்கள் பலரதும் பாராட்டுக்குள்ளானது.<br />
<a  href="http://www.pungudutivu.org/wp-content/uploads/2011/10/Navethan01.jpg" class="thickbox no_icon" rel="gallery-2680" title="Navethan01"><img class="aligncenter size-medium wp-image-2683" title="Navethan01" src="http://www.pungudutivu.org/wp-content/uploads/2011/10/Navethan01-325x485.jpg" alt="" width="325" height="485" /></a><br />
யாழ். இலக்கிய வட்டம் நாவேந்தன் நினைவாக ஆண்டு தோறும் ஈழத்தில் வெளியாகும் சிறுகதைத் தொகுதிகளுக்குள் சிறந்ததெனத் தெரிவு செய்யப்படும் சிறுகதைத் தொகுதிக்கு நாவேந்தன் விருதினை வழங்கிவருகிறது.</p>
<p><strong>வெளிவந்த நூல்கள்</strong><br />
<strong>சிறுகதைத் தொகுதிகள்</strong></p>
<p>வாழ்வு<br />
தெய்வ மகன்</p>
<p>வாழ்வு சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதினையும் (1964) பெற்றது.<br />
குறுங்காவியம்</p>
<p>மரியாள் மகதலேனா</p>
<p><strong>கட்டுரை நூல்கள்</strong></p>
<p>மானவீரன் கும்பகர்ணன்<br />
சிலப்பதிகாரச் செந்நெறி<br />
நான் ஒரு பிச்சைக்காரன்<br />
தலைவர் வன்னியசிங்கம்<br />
ஜோண் கஸ்டர்</p>
<p><strong>நாடகங்கள்</strong></p>
<p>பெருநெருப்பு<br />
மண்டோதரி<br />
தாரை</p>
<p><strong>அரசியல் நூல்</strong></p>
<p>சிறீ அளித்த சிறை</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.pungudutivu.org/%e0%ae%aa%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>புங்கை. நாவேந்தன் எழுதிய சிறீ அளித்த சிறை &#8211; அரசியல் நூல்</title>
		<link>http://www.pungudutivu.org/%e0%ae%aa%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af</link>
		<comments>http://www.pungudutivu.org/%e0%ae%aa%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af#comments</comments>
		<pubDate>Thu, 13 Oct 2011 16:53:33 +0000</pubDate>
		<dc:creator>Pungudutivu.org</dc:creator>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Peoples]]></category>
		<category><![CDATA[நாவேந்தன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.pungudutivu.org/?p=2673</guid>
		<description><![CDATA[புங்கை. நாவேந்தன் எழுதிய சிறீ அளித்த சிறை &#8211; அரசியல் நூல் shree-aliththa-sirai-naaventhan நாவேந்தன் (டிசம்பர் 14, 1932 &#8211; ஜூலை 10, 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது &#8220;வாழ்வு&#8221; சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் ...]]></description>
			<content:encoded><![CDATA[<p><a  href="http://www.pungudutivu.org/wp-content/uploads/2011/10/shree-aliththa-sirai-naaventhan.pdf"><br />
புங்கை. நாவேந்தன் எழுதிய சிறீ அளித்த சிறை &#8211; அரசியல் நூல்<br />
</a><br />
<a  href="http://www.pungudutivu.org/wp-content/uploads/2011/10/shree-aliththa-sirai-naaventhan.pdf">shree-aliththa-sirai-naaventhan</a></p>
<p>நாவேந்தன் (டிசம்பர் 14, 1932 &#8211; ஜூலை 10, 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது &#8220;வாழ்வு&#8221; சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது.</p>
<p>நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தவர். பயிற்றப்பட்ட ஆசிரியராகி சட்டமுதற் தேர்வில் சித்திபெற்று முதலாந்தர அதிபராகப் பதவியில் உயர்ந்தவர். அரசியல் அரங்கிலும் இலக்கிய உலகிலும் தனக்கெனத் தனியான தமிழ் நடையைக் கொண்டிருந்தார்.</p>
<p>மது பதினைந்தாவது வயதில் இந்து சாதனம் மூலம் எழுத்துத்துறையில் புகுந்த நாவேந்தன் தமிழ்க் குரல், சங்கப்பலகை, நாவேந்தன், நம்நாடு ஆகிய இதழ்களை நடத்தினார். ஆம்பலூர் அருணகிரிதாசர், பண்டிதர் பரசுராமமூர்த்தி, காண்டீபன், நக்கீரன், தீப்பொறி, ததீஜி ஆகிய பல புனைப்பெயர்களில் விமர்சனங்களை எழுதியுள்ளார்.</p>
<p>தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, விவேகி, கலைச் செல்வி, உதயன், உதயதாரகை ஆகிய இதழ்களில் இவரது சிறுகதைகள் பல வெளிவந்தன. எனினும் சுதந்திரனிலேயே அதிகமான சிறுகதைகளையும் நாடகங்களையும் கவிதைகளையும் எழுதியுள்ளார். தமிழகத்திலிருந்து வெளியான தென்றல், உமா, கலைமன்றம், அறப்போர், தென்றல்திரை, சாட்டை, மணிமொழி ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியிட்டுள்ளன. தமது இறுதிக்காலத்தில் இவர் எழுதிய &#8220;மரியாள் மகதலேனா&#8221; என்னும் குறுங்காவியத்தை தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாணம் அத்தியட்சாதீனம் வெளியிட்டது.</p>
<p>சமுதாய அவலங்களை சாதாரண மக்களின் பிரச்சினைகளை மூடத்தனங்களை தீண்டாமையைக் கருப்பொருளாகக் கொண்டு சிறுகதைகள் படைத்தார். இவர் அநேக கட்டுரை நூல்களையும் நாடகங்களையும் எழுதியுள்ளார்.</p>
<p>யாழ்ப்பாணம் மாநகரசபையின் பிரதி மேயராகவும் பதவிவகித்தவர் நாவேந்தன். இலங்கை தமிழரசுக் கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் பங்குபற்றியவர். சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டத்திலீடுபட்டு ஒருவார காலச் சிறைத் தண்டனையையும் அனுபவித்தவர். சிறையிலிருந்து வெளிவந்ததும் அவர் எழுதி வெளியிட்ட &#8220;சிறீ அளித்த சிறை&#8221; என்னும் நூல் அரசியல் தலைவர்கள் பலரதும் பாராட்டுக்குள்ளானது.</p>
<p>யாழ். இலக்கிய வட்டம் நாவேந்தன் நினைவாக ஆண்டு தோறும் ஈழத்தில் வெளியாகும் சிறுகதைத் தொகுதிகளுக்குள் சிறந்ததெனத் தெரிவு செய்யப்படும் சிறுகதைத் தொகுதிக்கு நாவேந்தன் விருதினை வழங்கிவருகிறது.</p>
<p><strong>வெளிவந்த நூல்கள்</strong><br />
சிறுகதைத் தொகுதிகள்</p>
<p>    வாழ்வு<br />
    தெய்வ மகன்</p>
<p>வாழ்வு சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதினையும் (1964) பெற்றது.<br />
குறுங்காவியம்</p>
<p>    மரியாள் மகதலேனா</p>
<p>கட்டுரை நூல்கள்</p>
<p>    மானவீரன் கும்பகர்ணன்<br />
    சிலப்பதிகாரச் செந்நெறி<br />
    நான் ஒரு பிச்சைக்காரன்<br />
    தலைவர் வன்னியசிங்கம்<br />
    ஜோண் கஸ்டர்</p>
<p>நாடகங்கள்</p>
<p>    பெருநெருப்பு<br />
    மண்டோதரி<br />
    தாரை</p>
<p>அரசியல் நூல் </p>
<p>    சிறீ அளித்த சிறை</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.pungudutivu.org/%e0%ae%aa%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>காலத்துயர் &#8211; சு.வில்வரத்தினம்</title>
		<link>http://www.pungudutivu.org/kaalathuyar-su-vilvarathinam</link>
		<comments>http://www.pungudutivu.org/kaalathuyar-su-vilvarathinam#comments</comments>
		<pubDate>Thu, 13 Oct 2011 16:30:07 +0000</pubDate>
		<dc:creator>Pungudutivu.org</dc:creator>
				<category><![CDATA[Peoples]]></category>
		<category><![CDATA[கவிதைகள்]]></category>
		<category><![CDATA[சு.வில்வரத்தினம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.pungudutivu.org/?p=2652</guid>
		<description><![CDATA[Click the link to download காலத்துயர் &#8211; சு.வில்வரத்தினம்]]></description>
			<content:encoded><![CDATA[<p><a  href="http://www.pungudutivu.org/wp-content/uploads/2011/10/kalathuyar-1.jpg"><br />
</a>Click the link to download</p>
<p><a  href="http://www.pungudutivu.org/wp-content/uploads/2011/10/kalathuyar.pdf">காலத்துயர் &#8211; சு.வில்வரத்தினம்</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.pungudutivu.org/kaalathuyar-su-vilvarathinam/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மெய்யுள் (உலக விடுதலை இலக்கியம்)  மு.தளையசிங்கம்</title>
		<link>http://www.pungudutivu.org/meyyul-ulaka-viduthalai-iyakkam-thalayasainkam</link>
		<comments>http://www.pungudutivu.org/meyyul-ulaka-viduthalai-iyakkam-thalayasainkam#comments</comments>
		<pubDate>Thu, 13 Oct 2011 16:21:38 +0000</pubDate>
		<dc:creator>Pungudutivu.org</dc:creator>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Peoples]]></category>
		<category><![CDATA[People]]></category>
		<category><![CDATA[தளையசிங்கம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.pungudutivu.org/?p=2648</guid>
		<description><![CDATA[எழுச்சியுறும் பேரறிவே உன் தாளில் வீழும் என் அழைப்பு இது உனக்கே இது சமர்ப்பணம் மெய்யுள் பற்றி ஒரு மெய்யுள் இப்போ நீ என்னென்ன எழுதுகிறாய்? இலக்கியத்தில் என்னென்ன புது முயற்சிகள் செய்கிறாய்? என்ற கேள்விகள் ஒழியும் காலம் இன்று. எழுத்தில் எழுதியவையும், இலக்கியத்தில் செய்யுள் புது முயற்சிகளும் வாழ்க்கையில் இருக்கிறதா? வாழ்க்கையில் நடைபெறுகின்றனவா? என்று ...]]></description>
			<content:encoded><![CDATA[<p>எழுச்சியுறும் பேரறிவே<br />
உன் தாளில் வீழும்<br />
என் அழைப்பு இது<br />
உனக்கே இது<br />
சமர்ப்பணம்</p>
<p>மெய்யுள் பற்றி ஒரு மெய்யுள்<br />
இப்போ நீ என்னென்ன எழுதுகிறாய்?</p>
<p>இலக்கியத்தில் என்னென்ன புது முயற்சிகள் செய்கிறாய்? என்ற கேள்விகள் ஒழியும் காலம் இன்று. எழுத்தில் எழுதியவையும், இலக்கியத்தில் செய்யுள் புது முயற்சிகளும் வாழ்க்கையில் இருக்கிறதா? வாழ்க்கையில் நடைபெறுகின்றனவா? என்று கேட்கும் புதுச் சூழல் இன்று.</p>
<p>உனது வாழ்க்கையை எப்படிக் காண்கிறாய்?</p>
<p>உனது வாழ்க்கையைப் பொது வாழ்க்கையாய் மாற்ற என்னென்ன புது முயற்சிகள் செய்கிறாய்? என்ற பார்வை வலுப்பெறும் யுகம் இன்று. அந்தப் பார்வையின் வலுபுதுக் கலை இலக்கியங்களைக் கோரி நிற்கிறர்.</p>
<p>அந்தப் புது முயற்சிகள் வாழ்க்கையாகவே மாறுகின்றன. வாழ்க்கையே கலை: வாழ்க்கையே பேர் இலக்கியம். இதை ஆற்றுப்படுத்துகிறது இன்றைய மெய்முதல்வாதப் பெருந் தத்துவம்.</p>
<p>இந்த மெய் முதல் வாதப் போக்கின் பிரகடனமாகவே திரு. மு. தளையசிங்கம் அவர்களின் இம் மெய்யுள் தொகுப்பு வெளிவருகிறது.</p>
<p>இது அவரின் மூன்றாவது நூல்.</p>
<p>முதலாவது 1965இல் வெளியான ‘புதுயுகம் பிறக்கிறது.’</p>
<p>இரண்டாவர் 1970இல் வெளியான ‘போர்ப்பறை’. ‘மெய்யுள் 1974இல் வெளியாகிறது.</p>
<p>இம் மூன்று நூல்களுக்கிடையே உள்ள முக்கியத்துவம் சுவையானது.</p>
<p>மூன்றுமே மெய்யை – சத்தியத்தை – அழுத்திய நூல்கள் தான்.</p>
<p>ஆனால், அழுத்தம் பெற்ற விதங்கள் ஒவ்வொன்றிலும் வேறாகியும், தொடர்புபட்டும் ஒரு தத்துவ முழுமையாகிப் பரிணமிக்கின்றன.</p>
<p>தன்னில் மட்டும் மெய்யை அழுத்திய உள்ளொதுங்கிய போக்கு ‘புதுயுகம் பிறக்கிறதின்’ கடைசிக் கதையான ‘வெளி’க்குரியதென்றால், சகலதையும் மெய்யில் அழுத்தி விரியும் தத்துவ வார்ப்பு ‘போர்பறை’ நூலுக்குரித்தாகிறது.</p>
<p>‘மெய்யுளோ’ சகலதின் இயக்கங்களையும், அவற்றின் இயக்க விதிகளையும் மெய்யின் பின்னணியில் வைத்து அழுத்தி காட்டுகிறது. ‘போர்ப்பறை’ விரித்த தத்துவத்தின் பிரயோகப் படுத்தலுக்கான விதிகள் இதிலே (கலைஞனின் தாகம்) போடப்படுகின்றன.</p>
<p>இந்தப் பார்வையில் வர்க்கவியல் என்பது அற்பமாக, குணவியலே எல்லா இயக்கங்களுக்கும் எக்காலத்துக்கும் உரிய உண்மைப் பின்னணி என்பது விளக்கப்படுகிறது.</p>
<p>குணக் கலவைகளின் வார்ப்புக்கேற்ப ‘நான்’ நடத்தும் இயக்கங்களே அன்றிலிருந்து இன்றுவரை தேவ – அசுர, தர்ம – அதர்ம, நல்ல – தீய, தொழிலாளி – முதலாளி போக்குகளாக மாறி மாறிக் காலத்துக்கேற்ற கோலங்களில் தோன்றுகின்றன.</p>
<p>குணவியலை அறியாத வரைக்கும் தொழிலாளருக்குள் இருக்கும் முதலாளிகளையும், முதலாளிகளுக்குள் இருக்கும் தொழிலாளிகளையும் பொதுவுடமை வாதிகள் அறியப் போவதில்லை.</p>
<p>அதனால் தான் தொழிலாளர் புரட்சி துரைத்தனமாகத் தேங்குவதற்கும், தொழிலாளர் சர்வாதிகாரம் சோஸலிசத்தை விட்டு நகராமைக்கும் உரிய காரணங்களைப் பொதுவுடைமைவாதிகள் அறிவதில்லை.</p>
<p>பொதுவுடைமைப் போக்கின் இன்றைய தேக்கமே அதன் அறியாமையிலேயே ஆரம்பிக்கிறது.</p>
<p>‘மெய்யுளின்’ வருகை பொதுவுடைமைப் போக்கின் தேக்கத்தை உடைக்கும் அதே வேளையில், அதன் தேக்கத்துக்குரிய அடிப்படைக் கோளாறுகளான லோகாயத வர்க்க &#8211; இயக்கவியல் வரையறைகளையும் தகர்த்துவிடுகிறது.</p>
<p>இதன் மூலம் பொதுவுடைமைப் போக்கே விடுதலை பெறுகிறது.</p>
<p>விடுதலை பெறும் பொதுவுடைமைப் போக்கு, பூரண சர்வோதய எழுச்சிக்குரிய முக்கிய அம்சங்களில் ஒன்றாக மெய்முதல்வாதத்தின் மூலம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.</p>
<p>மு.த. தனக்கும் தன்னைப் போன்ற சிலருக்கும் ஆத்மீகத் தீட்சை கொடுத்தவரையும், தீட்சை கொடுக்கப்பட்ட தினத்தையும் அடிக்கடி நினைவுகூறுவார்.</p>
<p>தீட்சை கொடுத்தவர் இருபதாம் நூற்றாண்டில் பேரவதாரமான பகவான் ஸ்ரீ நந்தகோபாலகிரி.</p>
<p>தீட்சை கொடுக்கப்பட்ட தினம் அரவிந்தர் தினம் கூடவே இந்தியா விடுதலை பெற்ற தினமுமாகும். (1966 &#8211; யுரபரளவ 15)</p>
<p>இந்திய விடுதலைப் போராட்டம் சாதாரண தேசிய விடுதலைப் போராட்டம் அல்ல. ஞானிகளால் முன்னின்று நடத்தப்பட்ட அப்போராட்டம். “உலகின் ஆன்மீக விடுதலைக்காக இந்தியா நடத்திய முதல் புரட்சி” என்றே அரவிந்தர் அதைக் குறிக்கிறார்.</p>
<p>காந்தியின் வருகைக்கு முன், இந்தியச் சுதந்திரப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய அரவிந்தருக்குச் சிறையில் விவேகானந்தர் தோன்றி ‘பேர்மனம்’ பற்றி விளக்குகிறார்.</p>
<p>வெளியே சுதந்திரப் போராட்டம் நடந்துகொண்டிருக்க, அதன் ஆன்மீகக் கொள்கை விளக்கம் அரவிந்தருக்கு உள்ளே நடைபெறுகிறது.</p>
<p>உடல், உயிர், மனம் என்று வளர்ந்துவிட்ட இன்றைய மனித பரிணாமம் பேர்மனம் ஆகிய அடுத்த கட்டத்தை எட்டி விட்டதை அரவிந்தச் சிறையை விட்டு விடுதலை பெற்று வெளியே வந்து பிரகடனப் படுத்துகிறார்.</p>
<p>அந்தப் பேர்மன வளர்ச்சியின் பரவலான எழுச்சிக்குச் சர்வமத ஞானமே அடிப்படை என்பதன் வலியுறுத்தலே நந்த கோபாலகிரி என்ற பேர் அவதாரமாகும். விவேகானந்தரின் குருவான இராமகிருஷ்ண அவதாரம் அருட்டிவிட்டுச் சென்ற சர்வமத ஐக்கியத்தின் முற்றிய தொடர்ச்சி.</p>
<p>‘சர்வ மதங்களும் சமமானவையல்ல, எல்லாம் ஒன்றே’ என்ற ஞானம், சகல மக்களினதும் இன, மத, மொழி, கலாசார ஆணவத் தடைகளை அறுப்பதோடு, அதன் இடத்தில் எழுகின்ற புது யுகத்தின் எல்லாப் பொதுமைகளை நிலை நாட்டவும், சகல மக்களையும் மெய்யை நோக்கி ஆற்றுப் படுத்தவும் அது தானாகவே தூண்டுகிறது.</p>
<p>இத்தூண்டுதலின் கiலை ஒலிப்பே பாரதி கண்ட கிருதயுகம், பாரதி விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதாவின் சீடன், அரவிந்தரோடு உறவாடியவன்.</p>
<p>இந்த ஆன்மீகச் சூழலின் தரிசன வார்ப்பாகவே மு. தளையசிங்கம் திகழ்கிறார்.</p>
<p>அவர் நூலின் முக்கியத்துவத்தையும், இதன் அடிப்படையிலேயே நோக்கவேண்டும்.</p>
<p>அரவிந்தர் மனதின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி பற்றியும் பேர்மன் உச்சங்கள், அதன் கீழ் இடைத்தர உட்சுழிவுகள் பற்றியும் எழுதியுள்ள அளவுக்கு, இன்றைய இடைப்பட்ட நிலையில் பேர்மனதை நோக்கி மனித குலத்தை ஆற்றுப்படுத்துவதற்குரிய சமூக, பொருளாதார, அரசியல் தத்துவ இயக்கவியல் பற்றி எழுதுவதைத் தன் பணியாகக் கொள்ளவில்லை.</p>
<p>அந்தப் பணிக்குரிய தத்துவ வார்ப்பாகவே மு.த. வின் ‘போர்ப்பறையும்’, ‘மெய்யுளும்’ வெளிக்காட்டப்ப படுகின்றன.</p>
<p>அதனால்தான் மு.த.வின் பூரண சர்வோதயக் கோட்பாட்டை இன்றைய நியோமார்க்ஸிய, எக்லெட்டிச போக்குகளோடு ஒப்பிடும் சில மார்க்ஸிய வாதிகளின் அர்த்தமற்ற பார்வை சிரிப்புக்கிடமானதாக அமைகிறது.</p>
<p>மத ஸ்தாபனங்களை மத உண்மைகளாக மாறாட்டம் செய்து புறூடன், போர்ப்பாச், ஹெகல் என்று பலரின் சிந்தனைகளைத் தனது மாறாட்ட அறியாமைக்கேற்றவாறு ஒத்திசைவித்த மார்க்ஸின் தத்துவம் ஒருவேளை எக்லெட்டிசத்துக்குக் கிட்டே வந்தாலும் ‘உடல், உயிர், மனம் என்று வளர்ந்துள்ள பரிணாமம் இனிப் பேர்மனமாக வளரப் போகிறது’ என்ற பேர்ஞான உண்மையின் அடிப்படையில் தனது தத்துவத்தை நிறுவி, அந்த உண்மையை நோக்கிச் சமூக இயக்கங்கள் அனைத்தையும் வளர்த்துக் காட்டும் பூரண சர்வோதயக் கோட்பாட்டை அப்படி நினைப்பது தத்துவம் பற்றிய அறியாமையேயாகும்.</p>
<p>சகலவற்றையும் மெய்யின் எழுச்சிக்குரிய பூரண சர்வோதய மாற்றத்துக்கு ஆற்றுப்படுத்துவதே மெய் முதல்வாதம்.</p>
<p>அந்தச் சகல மாற்றங்களும் ஆரம்பத்தில் கலை, இலக்கிய, கலாசாரப் புரட்சிகளோடேயே தொடங்குவதால், மெய்யுள் உருவம் அப்புரட்சியைத் தொடக்கி வைக்கிறது.</p>
<p>அப்புரட்சி எழுச்சில் மட்டும் உன்னத இலட்சியங்களையும், கலைப்பரவசத்தையும் ‘படைத்து’ விட்டு வாழ்க்கையில் அவற்றுக்கு முற்றும் மாறாக வாழும் இன்றைய கலை இலக்கிய கர்த்தாக்களின் போக்கைத் தகர்ந்துவிடுகிறது.</p>
<p>இத்தகர்ப்பு வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படாத இலட்சியங்களின் கூடாரமாக, வாழ்க்கையின் போலிப் பிரதிப் பொருளாக அமைந்துள்ள கலை இலக்கியம் என்ற தனியான ஸ்தாபனத்தையும் தகர்த்துவிடுகிறது.</p>
<p>இதன்மூலம் கதை, கட்டுரை, கவிi என்ற இலக்கிய கர்த்தாக்களின் கற்பனைச் சிறையிலிருந்து கலை இலக்கியமே விடுதலை பெறுகிறது.</p>
<p>இந்த விடுதலை சகலரையும் கலைஞர் ஆக்குவதோடு அவர் புரியும் சகல தொழிலையும் கலையாக்குகிறது, இலக்கியமாக்கிறது.</p>
<p>இந்த நோக்கின் உன்னத சிருஷ்டியாகவே ‘கலைஞனின் தாகம்’ மெய்யுள் அமைகிறது.</p>
<p>இத்தரிசனத் தேவைகளின் நிகழ்வான மெய்யுள் உருவம் இன்றைய இலக்கியத்தை அழிக்கும் இலக்கியமாகவும், கலையை அழிக்கும் கலையாகவும் செயற்படும் அதேவேளையில் வாழ்க்கையையே கலையாகக் காணவைக்கும் சாதனமாகவும் அச்சாதனையின் மூலம் கலை இலக்கியத்தின் உச்ச தரிசன வெளிக்காட்டலாகவும் அமைகிறது.</p>
<p>அதனாற்றான் மெய்யுள் உருவம் பழைய இலக்கிய உருவங்களின் உடைப்பாகவும். அதேவேளை அவற்றின் கலப்பாகவும், அவைக்கும் அப்பாற்பட்ட மெய் &#8211; றியலிச (மெய் &#8211; சுநயடளைஅ). பிரபஞ்ச யதார்த்த வார்ப்பாகவும் அமையும்;.</p>
<p>இம் மெய்யுள் தொகுப்பிற் காணப்படும் ‘மெய்யுள் உள்ளும் மெய்’, ‘பூரண இலக்கியமும் அதன் தேவைகளும்’ ஆகிய இரண்டும் மெய்யுள்களைத் தவிர மற்றவை எல்லாம் 1972இன் கடைசிக் காலங்களின் எழுதப்பட்டவையாகும். ‘மெய்யுள் உள்ளும் மெய்’ 72 ஜூன் ‘மல்லிகை’யின் வெளிவந்தது. ‘பூரண இலக்கியமும் அதன் தேவைகளும் 71 ‘சத்தியம்’ வெளிவந்தது. வர்க்கவியலும் குணவியலும், என்பது ‘கலை, தொழுகை, விடுதலை, சத்தியம்’ என்ற தலைப்பில் சிறு நூலாக எழுதப்படவிருந்த மெய்யுளின் ஆரம்பக் குறிப்பே, ‘கலைஞனின் தாகத்தின்’ கடைசிப்பகுதி (அதாவது யு-2 வின் குணங்களை ஆராயும் இடத்திலிருந்து) ஆசிரியரால் விரித்து எழுதப்படவிருந்தும் அது நிறைவேற்றப்படாததால் அதற்கு ஆசிரியர் போட்டிருந்த குறிப்புகளோடேயே அது நிறைவு பெறுகிறது.</p>
<p>மு.த.வின் மெய்யுள்களில் காணப்படும் நல்லசிவம் ஒரு கற்பனைப் பாத்திரமல்ல. அவரது வெளி மனதுக்கு அகத்தின் ஆன்மீக உந்துதல் தூதனுப்பிய தூய உள்ளுணர்வே நல்ல சிவம். அரவிந்தரின் வார்த்தையில் சொல்வதானால் அந்த உள்ளுணர்வை “ழுஎநச ஆiனெ” என்று அழைக்கலாம்.</p>
<p>அதனால், நல்லசிவம் ஆத்மீக உண்மைக்கெதிரான எந்தச் சிறுமைகளையும், தடைகளையும், மாயைகளையும் உடைக்கும் நித்திய இயக்கமாகவே திகழ்கிறான்.</p>
<p>அந்த நல்லசிவத்தின் குரல் உங்களுக்குள்ளேயும் கேட்கிற காலம் தொடங்கிவிட்டது. இதோ அவன் உங்களுக்குள்ளே குரல் எழுப்புகிறான்.</p>
<p>சத்தியச் செங்காவலர் வருகிறார்.</p>
<p>தயார்ப்படுங்கள், தயார்ப்படுங்கள்!</p>
<p>உங்கள் கட்டுக்களைக் கலைக்கத் தயார்ப்படுங்கள்!</p>
<p>காலங்காலமாய் கலை இலக்கியமென்றும், கட்டுரையென்றும், கட்டுக்கதை, கவிதை என்றும் எழுதியும் அவை உங்கள்.</p>
<p>சுயநலக் கட்டுக்களை அறுக்கவில்லை.</p>
<p>தூக்கத்தைப் போக்கவில்லை.</p>
<p>கனவுகளைக் கலைக்கவில்லை.</p>
<p>மாறாகக் கட்டுக்களோடு இன்னொரு கட்டு</p>
<p>கலை இலக்கியக் கட்டு!</p>
<p>இவற்றைக் கலைக்கச் செங்காவலர் வருகிறார்.</p>
<p>எழுதியபடியும் சொன்னபடியும் வாழாத நீங்கள் சத்தியத்துக்கெதிரான திரிபுவாதிகள்.</p>
<p>‘நான்’ ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள்.</p>
<p>உங்களை விசாரிக்கக் கலை இலக்கியச் செங்காவலர் வருகிறார்.</p>
<p>அவர் நடத்தும் ஆத்ம கலாசாரப் புரட்சியில் உங்கள் கலை இலக்கியக் கறுப்புச் சந்தைத்தனம் கலைப்படப் போகிறது. அந்தக் கலைப்புத்தான் இனிவரும் இலக்கியம். கலையை அழிக்கும் கலை, இலக்கியத்தை அழிக்கும் இலக்கியம்.</p>
<p>தயார்ப்படுங்கள்! தயார்ப்படுங்கள்!!</p>
<p>மு. பொன்னம்பலம்<br />
புங்குடுதீவு 9 &#8211; இலங்கை.</p>
<p>சசி<br />
1966ன் நடுப்பகுதியிற்தான் இப்பிறப்பில் நான் ஈஸ்வரனின் முக்கிய பக்தர்களில் ஒருவரைச் சந்தித்தேன்.</p>
<p>அவர் தன்னுடைய பெயரைத் தளையசிங்கம் என்று எனக்கு அறிவித்தார். அவர் சொன்ன அந்தப் புதுப்பெயரை ஞாபகத்தில் வைத்திருக்க முயன்று தோல்வியுற்றபோது இந்தப் பெயரைவிட அவரது முன் ஜன்மத்தின் பெயராலேயே தொடர்ந்து அழைப்பதை நான் விரும்புகிறேன் என்று கூறினேன்.</p>
<p>சிறிது காலத்துக்குப் பின்னர், அவரது குருதேவர் பகவான் ஸ்ரீ நந்தகோபாலகிரி அவருக்கு விநாயகதாஸ் என்ற ஆச்சிரமப் பெயரை வழங்கினார். ஆனால், நானோ அவரை அவரது மகா சமாதியின் இறுதிவரை ‘சசி’ என்றே அழைத்து வந்தேன்.</p>
<p>யார் இந்தச் சசி?</p>
<p>இவர் வேறு யாருமல்ல, ஸ்ரீ இராமகிருஷ்ணரின் பெரும் பக்தராக முன்பிருந்த இராமகிருஷ்ணானந்தாவே தான். இவருக்கிருந்த அளவுகடந்த குரு பக்தியினால் குருவின் பெயரை இவருக்கு வழங்கப்பட்டது. இதைப் பற்றி விவேகாந்தரே, சசியைத் தவிர அளவு கடந்த குரு பக்தியுள்ளவர் யாருமில்லை. ஆகவே, இராமகிருஷ்ணானந்தா என்ற பெயர் இவருக்கே அதிக பொருத்தமானது என்று கூறியுள்ளார்.</p>
<p>“ஈஸ்வர கோஷ்டி” என்று சுருதிகளிற் கூறப்படும் தனியான பக்தர் கூட்டத்தைச் சேர்ந்தவரே சரி. அவதாரத்தோடு பிறப்புப் பிறப்பாகத் தொடர்ந்து வந்து அவரது மெய்விளக்கத்தை அழுத்த வரும் ஜீவன் முக்தர் கூட்டத்தைச் சேர்ந்தவரே அவர்.</p>
<p>முன்பு இதே சசி மகா சமாதியடைந்ததைக் கேள்வியுற்றபோது, புனித அன்னை சாரதா தேவியார் சோகந்தொனிக்கப் பின்வருமாறு கூறினார்: “என்னுடைய சசி போய்விட்டார். என்னுடைய முதுகெலும்பு முறிந்துவிட்டது.”</p>
<p>அவற்றை நான் இன்று மீட்டொலித்துப் பார்க்கும் அதேவேளையில், பின்வருவனவற்றையும் சேர்த்துக் கொள்கிறேன்.</p>
<p>சசி தனது ஸ்தூவ உருவத்தை, இற்றுப்போன அணிகலன் ஒன்றை ஒதுக்கியது போல் ஒதுக்கி விட்டாலும், அவர் தொடர்ந்து ஆத்மீக உருவத்தில் வாழவே செய்கிறார். அவர் இவ்வுலகத்தில் நடமாடியபோது செய்ததைவிட அதிகப்படியான அக்கறையோடும் வேட்கையோடும் ஆத்மீக சாதகர்களையும், சமூக சேவையாளர்களையும் வழிப்படுத்துவார்.</p>
<p>- அன்னை<br />
சர்வமத சங்கம்</p>
<p>தளைசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம்<br />
-சுந்தர ராமசாமி</p>
<p>மு. தளையசிங்கம் தமிழகத்தில் போதிய அறிமுகம் பெறாதவர். இவருடைய மூன்று புத்தகங்கள் அச்சேறயுள்ளன. ‘புதுயுகம் பிறக்கிறது’ – பதினோறு சிறு கதைகளின் தொகுப்பு. முதல் பதிப்பு 1965. ‘போர்ப்பறை’ – கதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றின் தொகுப்பு. முதற்பதிப்பு 1970. ‘மெய்யுள்’ கட்டுரைகள், &#8211; சம்பாஷணைகள், கவிதைகள், நாவல் ஆகியவற்றின் தொகுப்பு. தளையசிங்கத்தின் மறைவுக்குப் பின் 1974இல் வெளிவந்தது. இவை தவிர அச்சில் வந்தவையாகவும், கையெழுத்துப் பிரதிகளாகவும் வேறு எழுத்துக்களும் உள்ளன. ‘ஒரு தனி வீடு’, ‘யாத்திரை’, ‘கல்கி புராணம்’ ஆகிய நாவல்கள் முழுமை பெற்றவை. ‘ஒளியை நோக்கி’ என்ற நாவல் குறையாக நிற்கிறது. ‘குருக்ஷத்திரம்’, ‘எதிரிகள்’, ‘ஓமாக்கினி’ ஆகிய முயற்சிகளும் உள்ளன. ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி – சில அவசரக் குறிப்புகள்’ என்ற தலைப்பில் ஈழத்து நவீன இலக்கியத்தை விமர்சிக்கும் கட்டுரைகள் செய்திப் பத்திரிகையில் அவர் வாழ்நாளிலேயே தொடர் கட்டுரைகளாக வந்து முழுமை அடைந்துள்ளன. இன்னும் புத்தக உருவம் பெறவில்லை. ‘மல்லிகை’, ‘பூரணி’, ‘சத்தியம்’ ஆகியவற்றில் வெளிவந்து தொகுக்கப்பட்டுள்ள எழுத்துக்களும் புத்தக வடிவம் பெறவில்லை.</p>
<p>தளையசிங்கம் 1935இல் பிறந்தார். 1957ல் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது ‘சுதந்திரம்’ என்ற பத்திரிகையில் இவருடைய முதல் சிறுகதையான ‘தியாகம்’ வெளிவந்தது. முதல் நாவலான ‘ஒரு தனி வீடு’ 1960ல் எழுதப்பட்டது. இரத்தினபுரியின் தான் படித்து வந்த கல்லூரியிலேயே இவர் ஆசிரியரானார். விமர்சனத்தில் தீவிர ஆர்வங்கொண்டார். ‘விமர்சன விக்கிரகங்கள்’ கட்டுரைத் தொடர் ‘தினகர’னில் வந்தபோது சர்ச்சைக்கு உள்ளாயிற்று. இக்காலத்தில் முற்போக்கு, நற்போக்கு இரண்டினது குறைகளையும் எடுத்துக் காட்டும் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். 1963ல் இவர் எழுதிய ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி: சில அவசரக் குறிப்புகள்’ தமிழ் இலக்கிய விமர்சனத் துறையில் ஒரு மைல் கல் என்று கருதப்படத்தக்கது. 1966ல் இவர் தனது குருவான ஸ்ரீ நந்தகோபாலகிரியை இரத்தினபுரியில் சந்தித்தார். இக்காலத்தில் இவருடைய வேலை புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு மாறிற்று. புங்குடுதீவில் பல ஆத்மீகப் பயிற்சிகளை மேற்கெதண்டு ஆத்மீக வகுப்புகள் நடத்தினார். 1968ல் சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்தார். 1969ல் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திகான முயற்சிகளில் ஈடுபட்டார். 1970ல் ‘சத்தியம்’ பத்திரிகையை வெளியிட்டார். தேர்தலில் சர்வோதய அரசியல் முன்னணியை உருவாக்கினார். 1971ல் புங்குடுதீவு கண்ணகியம்மன் கோவிலில் நன்நீர்க் கிணறுகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடம் அளிக்கும்படி போராட, போலீசாரால் தாக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார். 1972ல் மெய்யுள், என்ற புதிய இலக்கிய உருவம் போடப்பட்டது. 1973ல் இரண்டு மாதம் நோய்வாய்பட்டு ஏப்ரல் 2ஆம் தேதி மறைந்தார்.</p>
<p>நான் என் கட்டுரையை தமிழக வாசகர்களின் வசதியைக் கருதி அச்சேறியுள்ள இவரது மூன்று புத்தகங்களைச் சார்ந்த எழுதியிருக்கிறேன். முதற் பகுதி தளையசிங்கத்தின் கருத்துலகம் பற்றி, அதிகமும் அவர் வார்த்தைகளைப் பயன்படுத்தியே கூறுகிறேன். இரண்டாவது பகுதிகளைப் பயன்படுத்தியே கூறுகிறேன். இரண்டாவது பகுதி, இவருடைய சிந்தனைகளைப் பற்றி எனது எதிர்வினைகள்.</p>
<p>ஐ<br />
தளையசிங்கம் தனது கலைப் பார்வையை, ‘பிரபஞ்ச யதார்த்தம்’ என்று அழைக்கிறார். ‘பிரபஞ்ச யதார்த்தம் என்றால் என்ன? இதைத் தெரிந்து கொள்வதற்கான முயற்சிதான் இந்தக் கட்டுரை. கலைப்பார்வை வாழ்க்கைப் பார்வையின் ஒருபகுதி. வாழ்க்கை பார்வையைத் தெரிந்துகொள்ளாமல் கலைப் பார்வையை முழுமையாக அறிய முடியாது. ஆகவே தளையசிங்கத்தின் வாழ்க்கைப் பார்வையை மிகச் சுருக்கமாக பார்ப்போம்.</p>
<p>உலகெங்கும் மனிதன் அதிருப்தியில் ஆழ்ந்து கிடக்கிறான். அதிருப்தியின் வெளிமுகங்கள் பல. பயனற்ற பொழுது போக்குகளில் காலத்தை வீணடித்தல், போதைப் பொருட்களில் விஐந்து கிடத்தல், போலிக் கலைகள் எழுப்பும் கனவுகளில் தன்னை மறந்து நிற்றல், வாழ்க்கையில் ஆர்வமின்மை, சோம்பல், வன்முறை இவ்வாறான எதிர்மறைச் செயல்கள் ஒருபக்கம். மறுபக்கம் வௌ;வேறு தளங்களில் சமூக மாற்றத்திற்கான முயற்சிகள், போராட்டங்கள், இந்த வெளிப்பாடுகளில் பிரச்சினையின் ஆழத்தை உணர முடிகிறதா? முடியவில்லை. விஞ்ஞானப் பாய்ச்சல்கள் நிகழ்த்திக் கொண்டு வருகிறது. மனம் கசந்த மனிதன் சமூகத்தை உதறி வெளியேறிக் கொண்டிக்கிறான். உலகெங்கும் வௌ;வேறு விதமான சமூக அமைப்புகள் தோன்றியிருக்கின்றன. அவற்றை நாம் எப்பெயர் இட்டு அழைப்பினும் அங்கு அதிருப்தி மிஞ்சுகிறது. சமூக மாற்றங்கள் எவற்றைக் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும்? மெய்யான வளர்ச்சி எது? கட்சிகள் அரசுகள், நிறுவனங்கள் ஆகியவை தம் குறிக்கோள் பற்றித் தெளிவாக இருக்கின்றனவா? சமூக பொருளாதார மாற்றங்கள் பொருளாதாரக் காரணங்களுக்காகவே கொண்டு வரும்போது மேலான வாழ்வு மகுமா? இவற்றைத் தாண்டி மற்றொரு எழுச்சிக்குரிய தளமாக இம்மாற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றனவா? பௌதிக, சமூக, பொருளாதார, அரசியல் நிலைக்கும் அப்பாற்பட்ட உண்மை என்று ஒன்று இருக்கிறதா? இருக்கிறது. அது தான் சத்திய நிலை. இதை உத்தியோக பூர்வமாக ஏற்றுக்கொண்டு எந்த நாட்டு அரசாங்கமும் இன்று நிருவாகத்தை நடத்தவில்லை. கடவுள் என்பது மாற்றமற்ற சத்தியம். கடவைள ஏற்றுக்கொள்ள விரும்பாதோர் புத்தர் கூறிய நிர்வாணத்தை ஏற்றுக்கொள்ளலாம். பௌத்தர்கள் கடவைள மறுப்பினும், கடவைள ஏற்பவர்கள் நிர்வாணத்தை ஏற்றுக்கொள்வர். நிர்வாண நிலைதான் திருப்தியை அளிக்கக் கூடியது. இந்த சத்திய நிலை முழுச் சமூகத்திலும் பரவாதவரையிலும் அதிருப்தியை தொடரும்.</p>
<p>சடம், உயிர், மனம் என்று வளர்ந்துள்ள பரிணாமம் இன்று மனத்தையும் தாண்டிச் செல்ல முயல்கிறது. மனத்தைத் தாண்டிய நிலையில்தான் சத்தியத்தின் பூரணப் பிரவாகம். உட்புக முடியும். இன்று வரையிலும் ஞானிகளே இந்நிலையை அடைந்திருக்கின்றனர். கடுமையான பயிற்சிகள் மூலம் இந்நிலையை இவர்கள் அடைந்தவர். ஞானிகளிடம் தோன்றிய சத்திய எழுச்சியை எங்கும் நீக்கமற நிலையச் செய்ய வேண்டும். ஆகவே இன்றைய பிரச்சினைகளை ஆராயும்போது அவற்றை அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதாரத் தளத்தில் மட்டும் வைத்து ஆராயாமல் பூரண பரிணாமத் தேவையான சத்திய எழுச்சிக்குரிய ஆழம் வரையிலும் விரித்துப் பார்க்கவேண்டும். அதிருப்தியாளனே போராட முன் வருவான். அதிருப்தியாளர்களில் கலைஞர்கள் நுட்பமான உணர்வுகளும், அகலமான மன விரிவுகளும், ஆழமான சிந்தனையும் கொண்டவர்கள். அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிக்குரிய சமிக்ஞையின் அலைகள், ஞானிகளை விட்டவிட்டால் கலைஞர்களிடமே அதிக அளவில் தட்டுப்படவாய்ப்பிருக்கிறது. இந்த அலைகளுக்கு உருவம் கொடுக்க வேண்டிய பொறுப்பில் இன்றைய கலைஞன் இருக்கிறான். ஞானிகளின் மேலான நிலைக்கு முழு மனித குலத்தையும் உயர்த்த வேண்டும். இந்தத் தாண்டல் நிலைவேறுவதற்கு முன் சிறு சிறு கூட்டங்கள் இணைந்து பெருங்கூட்டமாக மலர வேண்டியுள்ளது. இது கலைஞர்களின் கூட்டமாகவும் சிந்தனையாளர்களின் கூட்டமாகவும் இருக்கும்;.</p>
<p>மெய்யான மதத்திற்கும், மெய்யான விஞ்ஞானகத்திற்கும் முரண்பாடு எதுவும் இல்லை. ஒன்று உண்மைக்கு உள்ளுணர்வுகளை நாட, மற்றொன்று புற உலகைச் சார்ந்து நிற்கிறது. ஒன்று அனுபவம். மற்றொன்று ஆராய்ச்சி. சீரழிந்த மதமும் சீரழிந்த விஞ்ஞானமும், பொது ஒற்றுமைகளைக் கொண்டவை. வாழ்க்கையையும் சமூகத்தையும் துறக்கத் தூண்டிய மதத்தைக் கேலி செய்தது விஞ்ஞானம். மேற்கே அதே விஞ்ஞானம் முதலாளித்துவத்திற்கு தன் ஆத்மாவை விற்று வாழ்வை அழித்தது. நீக்ரோக்களை ஒதுக்கி வைக்கும் சமூகம் எந்த அளவு விஞ்ஞான பூர்வமானது? மனிதத் தன்மைகளை பண நாயகம் விழுங்கிக் கொண்டிருப்பது வரையிலும், உலக சர்வாதிகாரத்திற்கு கனவுகள் கண்டு கொண்டிருப்பது வரையிலும், சந்திர யாத்திரைக்கும் காசி யாத்திரைக்கும் அதிக வேற்றுமை இல்லை.</p>
<p>முதலாளித்துவ அமைப்பும் பொதுவுடைமை அமைப்பும் சத்திய எழுச்சிக்குரிய தளங்களும் வழி வகுக்கவேண்டும். முதலாளித்துவ அமைப்பு பொது உடமை அமைப்பு வழியாகத் தான் சத்திய எழுச்சிக்குரிய தளத்துக்கு செல்லவேண்டும் என்பதில்லை. முதலாளித்துவ அமைப்புத் தோன்றுவதற்கு மு;னரே நிலவுடமை அமைப்பிலிருந்தே நேராக பொதுவுடமை அமைப்புக்குப் போக முடியுமென்றால், முதலாளித்துவ அமைப்பும் பொதுவுடமை அமைப்பைத் தாண்டி சத்திய எழுச்சிக்குரிய தளத்திற்குச் செல்ல முடியும். ஒவ்வொரு சமூக அமைப்பும் மாற்றமடைந்து கொண்டிருக்கிறது. சமூகம் மாற மதிப்பீடுகள் மாறுகின்றன. இம்மாற்றத்தை விஞ்ஞான ரீதியாக உணர்ந்த மார்க்சீயவாதிகள், முழுமையை நோக்கி சமுதாயத்தை துரிதப்படுத்தி வளர்க்க முயன்று கொண்டிருக்கிறார்கள். சத்தியத்தைப்பற்றிய தரிசனங்கள் அறிவுக்குள் சீராக இறக்கப்பட்டு அறிவின் உதவி மூலம் வியாக்கியானப்படுத்தப்படும் போதுதான் மனித வளர்ச்சிக்கு உதவும் பார்வை விரிவடையும்.</p>
<p>இன்று நடைமுறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெரிய தத்துவம் மார்க்சியம் மட்டும் தான். வாழ்வின் அன்றாடப் பிரச்சினைகளை விளக்கிக் கொள்ளவும், அந்த விளக்கத்தின் மூலம் சமூகத்தின் பிற துறைகளுக்குரிய செயல்களை நிர்ணயிக்கவும் எந்தத் தத்துவம் மக்களால் பயன்படுத்தப்படுகிறதோ அது வாழும் தத்துவமாக அமைகிறது. மற்றச் சிந்தனைகளால் முழுச் சமூகத்தையும் அரசியல், பொருளாதாரம், கலைபோன்று பிற துறைகளையும் ஸ்பரிசித்துப் பேச முடியாது. ஆகவே, இன்றைய நிலையில் கலைஞன் தனது கலையின் ஆட்சியை இன்னும் கூர்மையாகவும், வலுவாகவும் செலுத்த வேண்டும் என்றால் ஒன்று அவன் மார்க்சிய வாதியாக இருக்கவேண்டும். அல்லது மார்க்சீயத்தை வெல்லும் மற்றொரு பார்வையைத் தேடிக்கண்டுபிடிப்பவனாக இருக்கவேண்டும். மார்க்சியத்தை இன்னும் யாரும் முழுமையாக வென்று விடவில்லை. வெல்ல முயன்றவர்கள் பூரண வெற்றி பெறவுமில்லை. மார்க்சியம் தோற்கும் இடத்தில் கூட, அது கொண்டு வந்த நன்மைகளை எடுத்துச் செல்லும் விசாலப்பார்வை வேண்டும்.</p>
<p>Continue Reading at <a  href="http://noolaham.net/project/04/369/369.htm">http://noolaham.net/project/04/369/369.htm</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.pungudutivu.org/meyyul-ulaka-viduthalai-iyakkam-thalayasainkam/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி &#8211; தளையசிங்கம்</title>
		<link>http://www.pungudutivu.org/elaandu-ilakkiya-valarchi-thalayasingam</link>
		<comments>http://www.pungudutivu.org/elaandu-ilakkiya-valarchi-thalayasingam#comments</comments>
		<pubDate>Thu, 13 Oct 2011 16:09:33 +0000</pubDate>
		<dc:creator>Pungudutivu.org</dc:creator>
				<category><![CDATA[Articles]]></category>
		<category><![CDATA[Peoples]]></category>
		<category><![CDATA[People]]></category>
		<category><![CDATA[Writers]]></category>
		<category><![CDATA[தளையசிங்கம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.pungudutivu.org/?p=2632</guid>
		<description><![CDATA[ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி மு. தளையசிங்கம் முன்னுரை தமிழ் இலக்கிய உலகில் மு.த. எழுதிய ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி ஓர் மைல்கல்லாகவே நிற்கிறதென்றால் அது மிகைப்பட கூற்றாகாது. அந்தளவுக்கு அதன் முக்கியத்துவம் பல பக்கம் கொண்டது. 1956ல் இருந்து 1963 வரையுள்ள குறுகிய கால எல்லையுள் இயங்கிய ஈழத்துத் தமிழ் இலக்கியப் போக்குகளை ஆய்வதுபோல அது ...]]></description>
			<content:encoded><![CDATA[<blockquote><p>ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி<br />
மு. தளையசிங்கம்</p></blockquote>
<p>முன்னுரை</p>
<p>தமிழ் இலக்கிய உலகில் மு.த. எழுதிய ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி ஓர் மைல்கல்லாகவே நிற்கிறதென்றால் அது மிகைப்பட கூற்றாகாது. அந்தளவுக்கு அதன் முக்கியத்துவம் பல பக்கம் கொண்டது. 1956ல் இருந்து 1963 வரையுள்ள குறுகிய கால எல்லையுள் இயங்கிய ஈழத்துத் தமிழ் இலக்கியப் போக்குகளை ஆய்வதுபோல அது தோற்றினும், முன்னுக்கும் பின்னுக்குமாக அது இலக்கியத்தை ஒட்டிய சமூக, பொருளாதார, அரசியல் வரலாற்றுப் பார்வையில் எடுக்கும் பாய்ச்சல்கள் மிகப் பெரிதாய் விரிகின்றன. ஆட்களை வைத்துக்கொண்டு போக்குகளைக் காட்டியும் போக்குகளில் இருந்து ஆட்களைத் தேர்ந்தும் ஒன்றோடொன்று பின்னியும் பிரித்தும் ஆக்க ரீதியான இலக்கிய விமர்சனமாகவும் இலக்கியமாகவும் ஓர் சமூகத்தின் மனோ அலசலாகவும் மாறி மாறித் தன்னைக் காட்டும் இவ்வாக்கம் தமிழில் தோன்றிய இவ்வகை இலக்கியங்களுள் தனியானது.</p>
<p>விமர்சக விக்கிரகங்கள் என்ற கட்டுரைத் தொடர் மூலம் ஈழத்து இலக்கிய விமர்சகர்களையே ஆக்க ரீதியில் விமர்சித்த எழுத்தாளனாய் விமர்சனத்துறையில் இறங்கிய மு.த. மூன்றாம் பக்கம், முற்போக்கு இலக்கியம் ஆகிய விமர்சனங்கள் மூலம் தனக்கெனத் தனி முத்திரை பதித்து தனக்கே உரிய நடுநிலை நோக்கில் எல்லாப் போக்குகளுக்குமுரிய நல்லதைக் கறந்தும் கெட்டதைக் கண்டித்தும் ஒரு மூன்றாம் பக்கப் போக்கை உருவாக்கி, &#8216;ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில் அதன் உச்சத்தையே தொட்டுவிடுகிறார். சுருங்கச் சொன்னால் ஈழத்துத் தமிழ் இலக்கியப் போக்குகளை தர்க்க ரீதியாக வளர்த்துக் காட்டுபவர் வராகவே உள்ளார்.</p>
<p>இவர் &#8216;ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி&#8217;யை எழுதிக்கொண்டிருக்கும் காலத்தில் கூட இலக்கிய உலகின் விமர்சகர்கள் என்று பெயர் எடுத்துக்கொண்டவர்கள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு எதுவும் எழுதவில்லை என்றே சொல்ல வேண்டும். அதோடு மார்க்சீய விமர்சகர்களாய் இவர்கள் இருந்தபோதும் சமூக, பொருளாதார, அரசியல், வரலாற்றுக் கண்கொண்டு இலக்கிய ஆய்வுகள் செய்வதும் இவர்களுக்கு அந்நியமானதாகவே இருந்தது. &#8216;ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி&#8217;யின் வெளிப்பாடு. இத்தகைய பார்வைக் குறைவுகளுக்கும் நொண்டித்தனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாகவே அமைந்தது.</p>
<p>&#8216;ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி&#8217; மூலம் மு.த. மிக ஆழமான சில விஷயங்களைத் தனக்கே உ¡¢ய தெளிவோடு மிக எளிதாக விளக்கிக் காட்டுகிறார்.</p>
<p>முதலாவதாக, சரித்திர ஓட்டம் பற்றிய விஞ்ஞான ரீதியான விளக்கங்களுக்கு எதிராக, சந்தர்ப்ப விபத்தும் சரித்திரம் செய்கிறது என்பதை நிரூபிக்கிறார்.</p>
<p>இரண்டாவதாக, முன்னதன் பெறுபேறாய் ஈழத் தமிழர்களின் அரசியல், சமூக, பொருளாதாரப் பின்னணி வேறாக இருக்க, அக்கால இலக்கிய உலகு பிரதிபலிக்கத் தொடங்கிய &#8216;முற்போக்கு வாதம்&#8217; வேறானதாக அமையும் பிறழ்வுபற்றி விளக்குகிறார். அதாவது அரசியலில் ஈழத் தமிழர்கள் அனைவரும் தமக்கு சமஷ்டி ஆட்சிமுறையே தேவையென்று ஓரணியில் நின்று முன்வைக்கும் கோரிக்கைக்கு எதிராக, &#8216;முற்போக்கு இலக்கியம்&#8217; பிரதிபலித்த ஒன்றையாட்சி முறையும் அதற்குரிய தேசிய வாதமும் நிற்கின்றன என்ற விளக்கம். அதோடு மான்ய முறையை விட்டகலாத விவசாயப் பொதுப் பின்னணியில் ஆலை &#8211; தொழிலாளி &#8211; முதலாளி போராட்டம் என்னும் கற்பனைகள். அதனால் அளவுகெட்டுப் பிரதிபலிக்கத் தொடங்கிய பொதுப் பின்னணி.</p>
<p>இவற்றை மு.த. மிக அழகாக விளக்கிச் செல்கிறார். இவற்றின் விளக்கங்கள் அவர் காட்டும் ஈழத்தின் பொருளாதார, சமூக, அரசியல் பின்னணி ஆய்வில் தானாகவே வந்து விழுகின்றன.</p>
<p>ஆனால் ஈழத்து அரசியல்பற்றி அதிகம் தெரியாதவர்கள் இதைச் சுவைக்கவோ தன் முக்கியத்துவத்தை உணரவோ முடியாமல் போகும் என்பதும் உண்மையே. அதனால் அதுபற்றியும் சுருக்கமாக சில விளக்கங்களை தருவது அவசியமே. முக்கியமாக ஈழத்து அரசியல்பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்காத தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கு இது உதவும் என்பதால். (ஈழத்து அரசியபற்றி எதுவும் தெரியாமலேயே அநேக தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதை இங்கு வந்த தமிழ்நாட்டெழுத்தாளர் மூலமே அறிந்துள்ளோம்.)</p>
<p>இலங்கை 1948ல் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி (U.N.P.)யும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (S.L.F.P.)யுமே, இது காலவரை மாறி மாறி ஆட்சி செய்துள்ளன. U.N.P. முதலாளித்துவ, அமெரிக்கச் சார்புடையதாகவும் S.L.F.P. அதற்கு எதிரானதாகவும் காட்டிக் கொண்டுள்ளன. ஆனால் தமிழ் மக்களுக்கு எதிரானதாகவும் காட்டிக்கொண்டுள்ளன. ஆனால் தமிழ் மக்களுக்கு எதிரான இனத்துவேஷம் மேலோங்கலுக்கு, பின்னதே அதிக காரணமாய் இருந்துள்ளது.</p>
<p>1956ல் முதல்முதலாக S.L.F.P. பண்டாரநாயக்காவின் தலைமையில் ஆட்சிக்கு வந்தபோது 24 மணித்தியாலத்துக்குள் ஆங்கிலத்துக்குப் பதில் சிங்களத்தை அரசகரும மொழியாக்கும் வாக்குறுதியோடுதான் வந்தது.</p>
<p>தெற்கில் தன் எழுச்சி, வடக்கில் அதன் எதிர்விளைவாக தமிழ் மக்களிடையே இதுகாலவரை ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமையில் U.N.P. யை அடிவருடிய தமிழ்க் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையில் இயங்கிய தமிழரசு கட்சி என்றழைக்கப்படும் சமஷ்டிக் கட்சியை பெரும் வெற்றிபெறச் செய்தது. தெற்கில் தனிச்சிங்களம் என்றால் வடக்கில் எல்லாம் தமிழ் இயக்கம் என்ற எதிர்க்கோஷம்.</p>
<p>இச்சந்தர்ப்பத்தில் இடதுசாரிக் கட்சிகள் பொருளாதார நோக்கிலிருந்து முன்வைத்த தீர்வுகள் வடக்கிலும் தெற்கிலும் செல்லுபடியாகவில்லை. (இன்றும் அதுவே உண்மை.) கூடவே சமஷ்டி ஆட்சியின் தேவையை இடதுசா¡¢கள் உணர்ந்தபோதும், பலவித அரசியல் காரணங்களுக்காக அவர்கள் அதைப் புறக்கணித்து ஒற்றை ஆட்சி தேசியம் பேசி, தமிழ் மக்களின் ஏகோபித்த குரலை நசுக்கினர். இதுவே பொதுப் பின்னணி.</p>
<p>இந்தப் பின்னணியில் ஏதோ சோசலிசத்தை நோக்கிய நாடுகளில் நடைபெறுவதுபோல், எப்படி ஆலைகளும், முதலாளி தொழிலாளி வர்க்கப் போராட்டங்களும் சுலோகங்களும் எழுந்தன? பொதுப் பின்னணி வேறாக இருக்க, எப்படி ஒற்றை ஆட்சியையும் தேசிய வாதத்தையும் அழுத்தும் &#8216;முற்போக்கு இலக்கியம்&#8217; முன்னுக்கு வந்தது?</p>
<p>இதைத்தான் மு.த. சந்தர்ப்ப விபத்து சரித்திரம் செய்கிறது என்கிறார். அதாவது க. கைலாசபதி, தினகரன் ஆசிரியராக வந்த சந்தர்ப்ப விபத்தால் வந்த விளைவு என்பதை விளக்குகிறார். அதிலிருந்து பொதுப் பின்னணி அளவுகெடத் தொடங்கியதோடு அதன் தொடர் விளைவாக பல அளவுகள் கெடத் தொடங்கின. வெளியிலிருந்து பார்ப்போருக்கு இது பெரும் மாறுபட்ட விளக்கத்தையே தரும் என்பதை மு.த. விளக்கிச் செல்கிறார்.</p>
<p>மு.த.வின் நோக்கம் தோற்றங்களைக் கிழித்து உண்மையைக் காட்டுவதே. அது விமர்சனமாய் இருந்தாலும் சரி, ஆக்க இலக்கியமாக இருந்தாலும் சரி, அவற்றின் மூலம் உண்மை நிலைநாட்டப்படலே மு.த.வின் நோக்கம். அது &#8216;ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி&#8217;யிலும் செவ்வனவே நடைபெறுகிறது. தனக்கு மாறான இலக்கியப் போக்கைக் கொண்டெழுந்த பொதுப் பின்னணி எப்படி ஈற்றில் தனக்குரிய ஒன்றைக் கண்டடைகிறது என்பதை விமர்சனப் போக்கில் கதை போலவும் சுவைபட மு.த. விளக்கிச் செல்கிறார். இந்த விளக்கத்தில் மாறுபட்டுக் கிடந்த ஒவ்வொன்றும் தமக்குரிய இடத்தில் வந்து நின்று உண்மைக்கு வழிவிடுகின்றன.</p>
<p>இக்கட்டுரைத் தொடர், திரு ஆர்.எம். நாகலிங்கம் என்பவரை ஆசிரியராகக் கொண்டு, இலங்கை கண்டியிலிருந்து சில ஆண்டுகள் வெளிவந்த &#8216;செய்தி&#8217; என்ற பத்திரிகையில் 26.1.64 முதல் 17.1.65 வரையிலான ஓராண்டு காலம் வாரா வாரம் (அநேகமாக) 33 பகுதிகளாகப் பிரசுரமானது.</p>
<p>கட்டுரைத் தொடர் வெளிவந்த செய்தி இதழ்கள் சில கைவசம் இல்லாத நிலையில், இலங்கை தேசியக் சுவடிகள் திணைக்களத்திலிருந்து அவற்றினை பிரதி எடுத்துத் தந்த நீர்கொழும்பு செல்வன் ப. விக்னேஸ்வரனுக்கும் தேசிய சுவடிகள் திணைக்களத்தில் நாலுநாட்கள் செலவிட்டு மூலப்பிரதிகளுடன் ஒப்பிட்டு, தேவைப்பட்டதிருத்தங்களைச் செய்ததோடு செம்மையான கையெழுத்துப் பிரதியைத் தயாரித்துதவிய நண்பர் ஜீவகாருண்ணியத்திற்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.</p>
<p>மு.பொன்னம்பலம்<br />
சு. வில்வரத்தினம்</p>
<p>&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8212;&#8211;</p>
<p>ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி<br />
மு. தளையசிங்கம்</p>
<p>1. அரசியல், சமூக, பொருளாதாரப் பின்னணி:</p>
<p>1956 &#8211; 1963 எல்லை. பலருக்கு 1956ஆம் ஆண்டு நம்நாட்டுச் சரித்திரத்தில் மிக முக்கியம் வாய்ந்தது. பலவித சரித்திர ஓட்டங்களைப் பல துறைகளில் அவிழ்த்துவிட்ட ஆண்டு அது. பல பல அச்சங்கள், பல பல இலட்சியங்கள், அப்படிப் பல ரகம் அவை. அந்த ஓட்டங்களின் வகைகளையும் ஒன்றையன்று முட்டிய அவற்றின் தாக்கங்களையும் தன்மைகளையும் பின்பு ஆராயலாம். இப்போதைக்கு நம் ஈழத் தமிழிலக்கியத்தில் ஏற்பட்ட புதியதோர் ஊற்றும், சலசலப்பும், பிரவாக வேகமும் அவற்றுள் ஒன்று என்பதைக் கவனித்துக்கொண்டால் போதும். மற்றைய ஓட்டங்களைப்போல் அதுவும் ஒரு புதிய ஓட்டம்; இன்னும் முடியவில்லை; ஓடிக்கொண்டேருக்கிறது. சொல்லப்போனால் இன்னும் அது தன்னை நிச்சயமாகப் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஓர் ஆரம்ப சலசலப்பு. அதனால், இன்னும் சிதறலாகவே ஓடுகிறது. அதற்குரிய கால முத்திரை பதித்த திசையையும் படுகையையும் இனித்தான் அது கண்டுபிடிக்க எவ்வளவோ காலம் இருக்கிறது. முடிவு என்பதே ஏற்படுமா? அது வேறு பிரச்சினை, இப்போதைக்குத் தேவையில்லை. ஆனால், ஆரம்பம் நிச்சயம். அது 1956. இன்னும் இளமையைக் கூட எட்டவில்லையெனினும் ஏறக்குறைய ஏழாண்டு ஓடிவிட்டிருக்கிறது.</p>
<p>1956, ஈழச் சரித்திரத்தில் ஓரு புதிய ஓட்டத்தின் ஆரம்பம். ஈழத் தமிழர்களைப் பொருத்தவரையில் அது 1948ஐ விட முக்கியம் வாய்ந்தது. ஏன், அவர்களின் கண்கொண்டு பார்த்தால் உலக சரித்திரத்தின் 1452 கூட அதற்கு முன்னால் நிற்க முடியாது என்று சொல்லலாம். எனவே, இலக்கியத்திலும் ஒரு புதிய ஓட்டம். முன்பு வந்துபோன ஆறுமுக நாவலர் காலம், பின் வந்துபோன ஈழகேசரிப் பொன்னையா காலம் என்பவை எப்படியோ அப்படி இதுவும் ஒன்று. ஆனால் அவற்றை விட இது பரவலானது, ஆழமானது, அதோடு நீண்டு செல்லக்கூடியது. தமிழ் நாட்டில் மணிக்கொடிக் காலம் என்று ஒன்று எப்படியோ அப்படி 1956க்குப் பின் இங்கு.</p>
<p>அப்படியென்றால் பகீரதன் சொன்னது சரியா? பத்தல்ல இருபது ஆண்டுகளுக்குக் கூடுதலாகவா நாம் பிந்திப் போய்க்கொண்டிருக்கிறோம்?</p>
<p>இல்லை, இது வேறு. பகீரதனுக்குப் பைத்தியம். புதுமைப் பித்தனுக்கும் பாரதிக்கும் குழி தோண்டுபவர்களுக்கு, அவர்களின் பெயர்களைச் சொல்லிப் பேச என்ன உரிமை இருக்கிறது. இன்றைய நம் தரத்தை ஒப்பிடுபவர்கள் நம் இன்றைய உடன் நிகழ்காலத் தரங்களை ஒப்பிட்டுத்தான் அளவிடவேண்டும். இல்லாவிட்டால் சங்ககாலப் பாடல்களையும், சோழர் காலக் காப்பியங்களையும் வைத்தே நம்மை ஒதுக்கி விடலாமே! எனவே, இன்றைய உடன் நிகழ்காலத் தரந்தான் முக்கியம். அதை வைத்து ஒப்பிட்டால் நாம்தான் இருபது வருடங்கள் முன்செல்லத் துடிக்கிறோம். அது முக்கியம். பரவலாகப் பார்த்தால் அவர்கள் தூங்குகிறார்கள். நாம்தான் துடித்துக்கொண்டு நிற்கிறோம். இனி, ஓட்டம் நம்முடையதுதான். பாரதியும் புதுமைப்பித்தனும் விட்டடத்திலிருந்து நாம்தான் புதுமையையும், புரட்சியையும் மரபையும் இனி வர்ப்பவர்கள். மெளனியும் சி.சு. செல்லப்பாவும் மற்றவர்களுங்கூடனி நம் இயக்கத்தின் நிழலில்தான் அளக்கப்படுவார்கள். இங்கு எனக்குப் பிரியமான ஒரு உவமையைக் கையாள விரும்புகிறேன். அல்பிரட் காஸ.¢ன் என்ற அமெரிக்க விமர்சகர் இப்போக்னர், எமிங்வே கால இலக்கியங்களைப் பற்றிக் கூறும்போது ஆண்மையையும் வீரத்தையும் எதிர்பார்க்கும் ஒரு விரகதாபமுள்ள பெண்ணைப் போல் ஐரோப்பாவும் இனி அமெரிக்காவை நோக்கித் தான் புதிய வீரமும் ஆண்மையுமுள்ள இலக்கியத்துக்காக ஏங்கிக் கிடக்கும் என்று உவமித்தார். தமிழ்நாடும் அப்படியான இலக்கியத்துக்காக இனி நம்மைத்தான் எதிர்பார்க்கும். அதற்கு அறிகுறியாக 1956க்குப் பின் வந்த வளர்ச்சியே நிற்கிறது.</p>
<p>ஐம்பத்தாறில் ஆரம்பித்த புதிய போக்கின் முடிவு எப்வோ வரும் என்று சொல்வதற்கில்லை. இருந்தும் 63ன் முடிவில் இந்த இடைக்கால வளர்ச்சியைப்பற்றி ஒரு கணக்கெடுப்பை அவசியமாக்குதற்கு ஒரு விசேஷக் காரணமும் இல்லாமலில்லை. அதே காரணம் ஆரம்ப எல்லையான 1956க்கும் அதிக அழுத்தம் கொடுக்கிறது. அதுதான் க. கைலாசபதியின் வருகையும் 63ன் முடிவில் அவர் இங்கிலாந்துக்குப் போய் இருப்பதால் ஏற்பட்டுள்ள தற்காலிகமான பிரிவும். 1957ல் கைலாசபதி &#8216;தினகரன்&#8217; ஆசிரியரானார். அன்றுதொட்டு வளர்ந்த அவரது செல்வாக்கு இன்றுவரை நம் இலக்கிய உலகில் பலவித விளைவுகளை உண்டாக்கும் வகையில், நிழல் விரித்து, சிலசமயம் மிகப் பயங்கரமாகப் பேய் நிழல் விரித்து நிற்கிறது. 63ன் முடிவில் அவர் இங்கிலாந்துக்குப் போன பின்பும் அது தொடர்ந்து நிற்கவே செய்கிறது. என்றாலும், அவரது தற்காலிகமான பிரிவைச் சாட்டாக வைத்து நம் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியோடு சேர்த்து அவரது செல்வாக்கின் விளைவுகளையும் கணக்கெடுப்பது நியாயமாக்குந்தானே? நான் கைலாசபதியை வழிபடும் ஓர் பேர்வழியல்ல. என்றாலும், நேர்மையான ஒரு இலக்கியக் கணக்கெடுப்பில் நியாயமான இடம் யார் யாருக்கெல்லாம் கொடுக்கப்படவேண்டுமோ அவர்களை வேண்டுமென்றே புறக்கணிப்பவனுமல்ல. கைலாசபதி தோற்றுவித்த போக்குக்கும் அவரது இலக்கிய விமர்சனப் பார்வைக்கும், இந்தப் பாரபட்சமற்ற, புறக்கணிக்காத, நியாயமான கணக்கெடுப்பு என்ற என் கொள்கைக்குமிடையே மைல் கணக்கான தூரம் இருக்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அதற்காக நாமும் திருப்பி அதே வகையில் ஒரு எதிர்ப்புறக்கணிப்புக் காட்டுவதை நான் விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரையில் இந்த ஏழாண்டு இலக்கியப் போக்கோடு கைலாசபதியின் செல்வாக்கும்- அது பலரக விளைவுகளை உண்டாக்கினாலும்- பின்னிக் கிடக்கிறது என்பதே என் எண்ணம். எனவே 1956-63 எல்லைக் கணக்கெடுப்புக்கு என்னைப் பொருத்த வரையில் இரண்டு வித முக்கியத்துவம் உண்டு. நம் லக்கியப் பொதுப்போக்கை அளவிடும் அதே சமயம் மறைமுகமாகக் கைலாசபதியின் செல்வாக்கையும் அதன் விளைவுகளையும் அளவிடும் ஒரு இரட்டை முயற்சி.</p>
<p>பின்னணியும் ஒட்டங்களும்: இவை, சரித்திர சமூகவியல் சம்பந்தப்பட்டவை. இவற்றைப் படித்துவிட்டு இந்தளவு நீட்டுக்கு இவற்றைப்பற்றி எழுத வேண்டுமா என்று சிலர் நினைக்கலாம். அது அவரவர் அபிப்பிராயம். என்னைப் பொருத்தவரையில், இவை எல்லாவற்றையும் எழுதினால்தான் புதிய பரம்பரையின் முக்கியத்துவத்தை அதற்குரிய சரியான பின்னணியில் நிறுத்திக் காட்டலாம் என்று தோன்றுகிறது. இயன்றளவு என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு நடுநிலை வகிக்கும் ஓர் சரித்திர சமூகவியலாசிரியா¢ன் கண்கொண்டேவற்றைக் குறிக்கிறேன். ஆனால், என்னுள் கிடக்கும் இலக்கியாசிரியன் மற்றவற்றை முந்திக்கொண்டு தன்னைக் காட்டிக்கொள்ள மாட்டான் என்று நிச்சயமாகச் சொல்வதற்குமில்லை.</p>
<p>நான்கு நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட மேற்கத்தைய ஆட்சியின் முக்கிய பாதிப்புகளில் ஒன்று நம்மை, ஈழத்தமிழர்களை, வெறும் இயந்திரத் துரைத்தனக்காரர்கள் ஆக்கிய தன்மையாகும். முக்கியமாக ஆங்கில ஆட்சியின் பாதிப்பு அந்த வகையானது. போர்த்துக்கேய, ஒல்லாந்த ஆட்சிகளை விட ஆங்கிலேய ஆட்சி சிறந்ததுதான். அதிக சுதந்திரம், அதிக வளர்ச்சி, அதிகக்கல்வி என்று பொதுவாக ஒப்பிட்டுப் பார்த்தால் எல்லாம் அதிகமாகக் கிடைக்கத்தான் செய்தன. ஆனால் அதுதான், நாமும் நம் பாடும் என்று ஒருவிதச் சோம்பலான அசிரத்தையோடு நம் பாட்டில் நாம் அடங்கி நடப்பதற்கும் காரணமாய் இருந்திருக்கிறது. அந்தச் சோம்பலுக்கம் அசிரத்தைக்கும் ஏற்ற வகையில் அவர்கள் தந்த ஜனநாயக முறையும் இருந்தது. சுதந்திரத்துக்காக இரத்தம் சிந்திப் போராடும் நிலை நமக்கு ஏற்படவில்லை. போர்த்துக்கேய அல்லது ஒல்லாந்த ஆட்சி தொடர்ந்து இருந்திருந்தால் நாம் ஆபத்தோடு சதா வாழ்ந்திருப்போம். அதனால் ஆள்பவர்களிடம் சர்வாதிகாரம் இருக்கின்ற அதே சமயத்தில் மக்களிடம் சோம்பலும் அசிரத்தையும் கலவாத ஒரு புரட்சி மனப்பான்மையும் கடைசி அடியோடிய நிலையிலாவது இருந்திருக்கும். ஓர் அங்கோலா அல்லது அல்ஜீரியாவின் நிலை. ஆனால், ஒல்லாந்தாரோ, போர்த்துக்கேயரோ தொடர்ந்து இருக்கவில்லை. பின்பு வந்த ஆங்கிலேயரும் இந்தியாவில் நடந்து கொண்டதுபோல் இங்கு நடந்துகொள்ளவில்லை. நம்மை அடக்குவதற்குப் பதிலாக அவர்கள் இந்தியர்களை அடக்கினார்கள். நமக்குப் பதிலாக இந்தியர்கள் போரிட்டார்கள். கொலை செய்யப்பட்டார்கள். அடுத்த நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நமக்கு கோல்புரூக்கும், டொனமூரும், சோல்பரியும் கேட்காமலே வருபவர்கள் போலவே வந்தார்கள். வாக்குரிமையும் மற்ற உரிமைகளும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவர்களாகத் தருவன போலவே கிடைத்தன. அதனால், நம்மிடையே ஆபத்தைச் சந்திக்கும் ¨தா¢யம் தூண்டப்படவில்லை. புரட்சிப் போக்கு வளர்க்கப்படவில்லை. காலத்தையுணர்ந்த ஒரு புதிய பார்வை நேரவில்லை. எல்லா இனங்களுக்குமிடையே ஒரு இறுகிய ஒற்றுமை பிறக்கவில்லை. காந்தி படங்களும் நேரு படங்களும் இனவேலியைத் தாண்டி இந்தியாவில் எல்லா வீடுகளிலும் தொங்கியதைப்போல் இங்கு ஒரு ராமநாதனும், ஜயதிலகாவும், அருணாசலமும், செனநாயகாவும் தொங்கவில்லை. தமிழர்களின் வீடுகளில் கூட ராமநாதனின் படம் தொங்கவில்லை. ராஜாஜி, காந்தி, நேரு, சுபாஷ் போன்றவர்கள்தான் தொங்கினார்கள். கடைசியில் புரட்சி மனப்பான்மையையும், ஆபத்தைச் சந்திக்கும் ¨தா¢யத்தையும், உரிமைகளைக் கோரும் உணர்ச்சியையும், அடுத்த நாடான இந்தியாவிடம் ஒப்படைத்துவிட்டு வர்கள் இங்கு சோம்பலையும் அசிரத்தையையும் துரைத்தனத்தையும்தான் வளர்த்தார்கள். படித்ததெல்லாம் உத்தியோகத்துக்காக. பாடுபட்டதெல்லாம் பொருளீட்டுவதற்காக. அவற்றுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அதனால் நடந்துகொள்ள விரும்பவில்லை. ஆங்கிலேயரை அபிநயித்த ஓர் துரைத்தனந்தான் தமிழர்களிடையே அறிவாளி வர்க்கமாக இருந்தது. அதனால், அரசியல் சமூக கலாச்சார நிலையைப்பற்றி அந்த அறிவாளி வர்க்கத்துக்குக் கவலையில்லை. யார் ஆண்டால் என்ன? எப்படியோ இருக்கிற நிலைக்கு ஆபத்தில்லாமல் இருந்தால் போதும். அதோடு எல்லாம் நல்லாக வரும் என்ற சோம்பல் நம்பிக்கை. எனவே நல்லாகத் தூங்கினார்கள். ஆமாம் அதைத் தூக்கம் என்றுதான் சொல்ல வேண்டும். சமூகக் கலாச்சாரத் தூக்கம்.</p>
<p>1948உம் வந்தது.</p>
<p>சுதந்திரம் வந்தது. ஆனால், தமிழனுக்கு அதன் வித்தியாசம் தெரியவில்லை. (சிங்களவர்களுக்கும் ஓரளவு அப்படித்தான்) எந்த மாற்றமும் இருந்ததாகத் தெரியவில்லை. காரணம், துரைத்தனத்துக்கு இன்னும் ஆபத்து ஏற்படவில்லை. மற்றவர்களின் பிழைப்புக்கும் வழி தாராளமாகவே இருந்தது. ஹர்த்தால் எதுவும் வந்து அவர்களையும் இன்னும் கண்திறக்கச் செய்யவில்லை. இன்னும் தூக்கம். சுதந்திரம் வந்த வித்தியாசம் தெரியவில்லை.</p>
<p>அப்படியென்றால் ராமநாதன், அருணாசலம், ஜி.ஜி.பொன்னம்பலம் எல்லாரும் எப்படி வந்தார்கள்?</p>
<p>அதையும் விளக்க வேண்டும்.</p>
<p>அவர்கள் தனிப்பட்ட தலைவர்கள். மக்களின் பொதுவான விழிப்பைப் பிரதிபலிக்காதவர்கள். விழிப்பு இன்னும் ஏற்படவில்லை. பொன்னம்பலத்தின் ஐம்பதுக்கைம்பது கூடமக்களின் உண்மையான அக்கறை கலவாத ஒரு கோரிக்கை. மக்களின் உண்மையான அரசியல் அக்கறை அதற்குப் பின்னணியாக நிற்கவில்லை. மக்களுக்கு அரசியல் அக்கறை இன்னும் வளரக்கூடல்லை. இருந்ததெல்லாம் வெறும் மந்தை மனப்பான்மை கலந்த ஒரு தலைவர் வழிபாடுதான். பொன்னம்பலம் செய்ததெல்லாம் தன் சொந்தத் திறமையிலும் துணிவிலும் இருந்த நம்பிக்கையினாலும் கர்வத்தினாலுமே ஒழிய மக்கள் நலனிலும் உரிமைகளிலுமிருந்த அக்கறையினால் அல்ல. மக்கள் அவா¢டம் காட்டிய அபிமானமும் வெறும் வழிபாடே ஒழிய தங்கள் நிலையையும் நலனையும் தேவைகளையும் உணர்ந்த முயற்சியினால் வந்த தெரிவு அல்ல. எப்படி தமிழர்களின் அறிவாளி வர்க்கம் ஆங்கிலேயரை அபிநயித்து அவர்களிடமிருந்து &#8216;சபாஷ்&#8217; வாங்கும் துரைத்தனமாக மாறியதோ அப்படியேதான் அரசியலிலும் தமிழர்கள் காலத்தின் நிலையையும் தேவையையும் உணராது வெறும் பேச்சு வன்மையாலும், தோற்றத்தாலும், பழகும் முறையாலும் &#8216;சபாஷ்&#8217; வாங்கும் ஒரு தலைவரை வழிபட்டார்கள். அதனால், ஐம்பதுக்கைம்பது கேட்ட தலைவரால் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைய முடிந்தது. பிரஜா உரிமைச் சட்டத்துக்கும் குறுகுறுப்பில்லாமல் கை உயர்த்த முடிந்தது. அவரை அனுப்பிய மக்களும் அவற்றில் எந்த ஆபத்தையும் காணவில்லை. செல்வநாயகம் பிரிந்ததும், சமஷ்டிக் கட்சி தோன்றியதுங் கூட பொதுவாக அவர்களுக்கு ஒரு சினத்தைத்தான் கொடுத்திருக்க வேண்டும். நிம்மதியாகக் தூங்கவிடாமல், பேச்சு வன்மையாலும் தோற்றச் சிறப்பாலும் தாலாட்டப்பட்டுத் தூங்கிவிடாமல், நிலையை உணர்த்திச் செயலுக்கு அழைக்கும் குரல் அவர்களுக்கு ஒரு தொந்தரவாகத்தான் பட்டிருக்க வேண்டும். எனவே சினம். அம்முறை காங்கேசன்துறையில் செல்வநாயகத்தின் தோல்வி, அதன் அறிகுறி.</p>
<p>அந்த நிலையில் இடதுசாரிகள் என்ன செய்தார்கள்? &#8230;&#8230;&#8230;<br />
Continue Reading at <a  href="http://noolaham.net/project/01/01/01.htm">http://noolaham.net/project/01/01/01.htm</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.pungudutivu.org/elaandu-ilakkiya-valarchi-thalayasingam/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

