All posts in புங்குடுதீவு கீதம்

புங்குடுதீவு கீதம்

புங்குடுதீவெனும் தாயவளே! உனைப்
போற்றி நாம் வணங்குகிறோம்
எங்களை ஈன்ற இனியவளே – உனை
என்றுமே நாம் மறவோம்
மங்கலமோங்கி மகிழ்ச்சி ததும்பி
மறுபடி நாம் வாழ்வோம்!
சங்கப் புலவர்கள் போற்றிய சிறப்புகள்
சகலதும் – நாம் பெறுவோம்!

தாயே நீ வாழீ! தமிழே நீ வாழீ!
எம் – உயிரே நீ வாழீ! உயர்வாய் நீ வாழி!

ஆதவன் முன்பனி போல உன் துயரம்-
அம்மா மறைந்து விடும்
வேதனை தந்திடும் பகைவனின் வாழ்வு
விரைவினில் முடிந்து விடும்
தேசியத்தலைவனைக் காப்போம்! – ஈழத்
தேசம் அமைந்திட உழைப்போம்!
பாதைகள் ஒன்றாஇ நடப்போம்! பொதுப்
பகைவனை நாங்கள் அழிப்போம்!
தாயே நீ வாழி! தமிழே நீ வாழி!
எம் உயிரே நீ வாழி! உயர்வாய் நீ வாழி!
கோயில் தேவாலயம் விழாக்களை காணும்
குளங்களும் வயல்களும் நிரம்பும் – புலம்
மேவிய மக்களும் கூட்டமும் சேரும்
மேன்மைகள் வந்துகை கூடும்
நோயினில் வாடிய வாழ்வது நீங்கி
நிம்மதிக் காற்றது வீசும் – தலைவன்
நெஞ்சம் கவர்ந்தவள் வீடிது – என்றே
பெருமையாய் உலகம் பேசும்!

தாயே நீ வாழி! தமிழே நீ வாழி!
எம் – உயிரே நீ வாழி! உயர்வாய் நீ வாழி!

உன்மண்ணிலே தவழ்ந்து வாழ்ந்தவர் – நாங்கள்
மறந்திடுவோமோ உன்னை
உன்னில் எழுதிய – ‘அ’னா வரிகளால்
உயர்வடைந்தவர்கள் நாங்கள் – தாயே!
பனைமர வலிமை பெற்றோம்1 உன் நினைவுடன்
நிமிர்ந்திடக் கற்றோம்!
தலைவன் வழியிலே நடப்போம்! – வருந்
தடைகளை துணிவுடன் கடப்போம்

தாயே நீ வாழி! தமிழே நீ வாழி!
எம் – உயிரே நீ வாழி! உயர்வாய் நீ வாழி!

Continue Reading...

Site by Gradient Graphics.co.uk